Categories: தமிழகம்

அடங்காத ஆசை… அபுதாபி கள்ளக்காதலனுடன் அடிக்கடி உல்லாசம் : இடையூறாக இருந்த கணவன்.. காத்திருந்த ஷாக்!

அடங்காத ஆசை… அபுதாபி கள்ளக்காதலனுடன் அடிக்கடி உல்லாசம் : இடையூறாக இருந்த கணவன்.. காத்திருந்த ஷாக்!

திண்டுக்கல் மாவட்டம், மதுரை அருகே உள்ள சத்திரப்பட்டி சேர்ந்தவர் பாரிச்சாமி. இவருக்கு திருமணமாகி பரிமளா என்ற மனைவியும் மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

இவர் மதுரை அருகே உள்ள மஞ்சம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்தார்.

மேலும் படிக்க: பெங்களூரூ குண்டுவெடிப்பில் தொடர்பா..? தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வீட்டில் என்ஐஏ திடீர் ரெய்டு… கோவையில் பரபரப்பு

ரமேஷ் அபுதாபியில் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வருகிறார். அவர் விடுமுறையில் ஊருக்கு வந்தபோது அடிக்கடி கோழிப்பண்ணைக்கு சென்று வந்துள்ளார்.

அப்போது ரமேசுக்கும் பாரிசாமியின் மனைவி பரிமளாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி உள்ளது.

இதனை அறிந்த பாரிச்சாமி அவர்களை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்கள் பழக்கத்தை கைவிடாததால், பாரிச்சாமி வேலையை விட்டுவிட்டு வேடசந்தூர் அருகே உள்ள பெரியபட்டியில் உள்ள கோழிப்பண்ணையில் வேலைக்கு சேர்ந்தார்.

மேலும் தனது குடும்பத்தினரையும் வேடசந்தூருக்கு அழைத்து வந்தார். இது குறித்து பரிமளா வெளிநாட்டில் இருந்த ரமேசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவரை தீர்த்து கட்ட வேண்டும் என்றும் பரிமளா ரமேசிடம் கூறி கூறியுள்ளார்.

தான் வெளிநாட்டில் இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு செலவுக்கு பணம் கொடுத்து விடுவதாக ரமேஷ் கூறியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து பரிமளா மதுரையைச் சேர்ந்த குமார் என்பவரிடம் ஒன்றரை லட்ச ரூபாய் பணம் தருவதாக கூறி கூலிப்படையை ஏற்பாடு செய்தார்.

அதன்படி கடந்த 12ஆம் தேதி இரவு கோழிப் பண்ணைக்குள் புகுந்த ஏழு பேர் கொண்ட மர்ம கும்பல் கோழிப்பண்ணையில் மின்சாரத்தை துண்டித்து பாரிச்சாமியை கத்தி, அறிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த பாரிச்சாமியை அவரது குடும்பத்தினர் மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் பாரிச்சாமியின் மனைவி பரிமளா கூலிப்படையை வைத்து கணவரை கொல்ல முயன்றது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து பரிமளா மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த பெரியையன் என்ற குமார் (36) மற்றும் ஒரு 17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள 5 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே கூலிப்படையை ஏறி கொல்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

2 மகன்களை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த தாய் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…

1 hour ago

குட் பேட் அக்லி படம் ஹிட்டா? இல்லையா? இன்னும் எவ்வளவு கோடி வசூல் செய்யணும்?

நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளது. ரசிகர்களை தவிர மற்ற ரசிகர்களை…

1 hour ago

இன்ஸ்டாகிராமில் நிர்வாண வீடியோ… முதல்முறையாக மகிழ்ச்சியை பகிர்ந்த நடிகர் ஸ்ரீ!

வழக்கு எண் 18/9, மாநகரம், இறுகப்பற்று போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் ஸ்ரீராம். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று,…

2 hours ago

மைனர் சிறுமியுடன் கல்லூரி மாணவன் திருமணம்.. சினிமா பாணியில் சிறுமியை கடத்திய கும்பல்!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கழுகூர் பஞ்சாயத்து உடையாபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையில்…

3 hours ago

அவமானம்.. நிழல் முதலமைச்சர் சபரீசன் : CM குடும்பத்துக்கு பலன் கொடுக்கும் விண்வெளி கொள்கை.. அண்ணாமலை காட்டம்!

தமிழ்நாடு அரசின் விண்வெளி தொழில் கொள்கைக்கு நேற்று தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், கோபாலபுரம் குடும்பத்தின் தொழில்துறை கொள்கை…

3 hours ago

பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?

நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…

17 hours ago

This website uses cookies.