Categories: தமிழகம்

அடங்காத ஆசை… அபுதாபி கள்ளக்காதலனுடன் அடிக்கடி உல்லாசம் : இடையூறாக இருந்த கணவன்.. காத்திருந்த ஷாக்!

அடங்காத ஆசை… அபுதாபி கள்ளக்காதலனுடன் அடிக்கடி உல்லாசம் : இடையூறாக இருந்த கணவன்.. காத்திருந்த ஷாக்!

திண்டுக்கல் மாவட்டம், மதுரை அருகே உள்ள சத்திரப்பட்டி சேர்ந்தவர் பாரிச்சாமி. இவருக்கு திருமணமாகி பரிமளா என்ற மனைவியும் மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

இவர் மதுரை அருகே உள்ள மஞ்சம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்தார்.

மேலும் படிக்க: பெங்களூரூ குண்டுவெடிப்பில் தொடர்பா..? தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வீட்டில் என்ஐஏ திடீர் ரெய்டு… கோவையில் பரபரப்பு

ரமேஷ் அபுதாபியில் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வருகிறார். அவர் விடுமுறையில் ஊருக்கு வந்தபோது அடிக்கடி கோழிப்பண்ணைக்கு சென்று வந்துள்ளார்.

அப்போது ரமேசுக்கும் பாரிசாமியின் மனைவி பரிமளாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி உள்ளது.

இதனை அறிந்த பாரிச்சாமி அவர்களை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்கள் பழக்கத்தை கைவிடாததால், பாரிச்சாமி வேலையை விட்டுவிட்டு வேடசந்தூர் அருகே உள்ள பெரியபட்டியில் உள்ள கோழிப்பண்ணையில் வேலைக்கு சேர்ந்தார்.

மேலும் தனது குடும்பத்தினரையும் வேடசந்தூருக்கு அழைத்து வந்தார். இது குறித்து பரிமளா வெளிநாட்டில் இருந்த ரமேசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவரை தீர்த்து கட்ட வேண்டும் என்றும் பரிமளா ரமேசிடம் கூறி கூறியுள்ளார்.

தான் வெளிநாட்டில் இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு செலவுக்கு பணம் கொடுத்து விடுவதாக ரமேஷ் கூறியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து பரிமளா மதுரையைச் சேர்ந்த குமார் என்பவரிடம் ஒன்றரை லட்ச ரூபாய் பணம் தருவதாக கூறி கூலிப்படையை ஏற்பாடு செய்தார்.

அதன்படி கடந்த 12ஆம் தேதி இரவு கோழிப் பண்ணைக்குள் புகுந்த ஏழு பேர் கொண்ட மர்ம கும்பல் கோழிப்பண்ணையில் மின்சாரத்தை துண்டித்து பாரிச்சாமியை கத்தி, அறிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த பாரிச்சாமியை அவரது குடும்பத்தினர் மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் பாரிச்சாமியின் மனைவி பரிமளா கூலிப்படையை வைத்து கணவரை கொல்ல முயன்றது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து பரிமளா மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த பெரியையன் என்ற குமார் (36) மற்றும் ஒரு 17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள 5 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே கூலிப்படையை ஏறி கொல்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பரிதவித்த சூப்பர் சிங்கர் போட்டியாளரின் அம்மா..ஓடி வந்த ‘ராகவா லாரன்ஸ்’..குவியும் பாராட்டு.!

கொடை வள்ளல் ராகவா லாரன்ஸ்.! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மிகுந்த வரவேற்பை…

12 hours ago

ரோஹித்,கோலிக்கு பிசிசிஐ கெடுபிடி…பறந்து வந்த அதிரடி உத்தரவு…!

சம்பளம் குறைப்பு காரணம் இதுதான் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான வருடாந்திர ஊதிய ஒப்பந்தங்களை பிசிசிஐ வெளியிட உள்ளது.2025-26ஆம் ஆண்டுக்கான…

12 hours ago

சல்மான் கானுடன் லிப் லாக்… தீயாய் பரவிய ராஷ்மிகா வீடியோ.. இறுதியில் டுவிஸ்ட்!

தெலுங்கு, கன்னட சினிமாக்களில் கொடி கட்டி பறந்த ராஷ்மிகா, தமிழ், இந்தி மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். பாலிவுட் சென்ற அவர்…

13 hours ago

உண்மை இதுதான்..இன்ஸ்டாவில் நடிகை திடீர் போஸ்ட்..காட்டு தீயாய் பரவும் அந்தரங்க வீடியோ.!

நடிகை ஸ்ருதி நாராயணன் விளக்கம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும்…

14 hours ago

ஃபயர் மோடில் ‘ராம் சரண்’…பிறந்தநாள் பரிசாக படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ்.!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ராம் சரண் இன்று அவருடைய வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இந்த நிலையில் அவருடைய நடிப்பில்…

15 hours ago

ஆசையாக அழைத்த பெண்.. உள்ளே போனதும் லாக்.. திருப்பூரில் திகைத்த இளைஞர்!

திருப்பூரில், ஆசையாக அழைத்த பெண் கும்பலுடன் சேர்ந்து ஒருவரின் நகை மற்றும் பணத்தை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…

16 hours ago

This website uses cookies.