தமிழகம்

மாயமான கள்ளக்காதலி… 2 நாள் கழித்து காத்திருந்த அதிர்ச்சி : அரங்கேறிய நாடகம்!

புதுச்சேரி நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட வடுக்குப்பம் பெருமாள் கோயில் வீதியை சேர்ந்தவர் இளவரசி (38), வீட்டு வேலை செய்து வந்த இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் கணவரை பிரிந்து தனது 19 வயது மகன் மற்றும் 16 வயது மகளுடன் வாழ்ந்து வந்தார்.

இவருக்கு அதே பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுனரான கிருஷ்ணப்பன் என்கிற ராஜி 52 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இது நாளடையில் கள்ளக்காதலாக மாறி வீட்டில் இளவரசியின் பிள்ளைகள் இல்லாத போது கிருஷ்ணப்பன் இளவரசி வீட்டுக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில் பாக்கம் பகுதியில் உள்ள இளவரசியின் தாயார் ஆதிலட்சுமி வீட்டிற்கு கடந்த வெள்ளிக்கிழமை அவரது மகன் மற்றும் மகள் வார இறுதி நாட்கள் விடுமுறைக்கு சென்றுள்ளனர்.

பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரவு அவர்கள் வீடு திரும்பிய போது அவர்களின் தாயார் இளவரசி வீட்டில் இல்லாததை கண்டு அக்கம் பக்கம் தேடி உள்ளனர்.

தாய் எங்கும் கிடைக்காத நிலையில் இதுகுறித்து நேற்று காலை நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் இளவரசியின் தாயார் தனது மகளை காணவில்லை என புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கினர்.
இதற்கிடையே இளவரசியின் மகன் தனது தாயின் செல் போன் எண்ணிற்கு அழைத்தபோது எதிர் முனையில் இருந்து பள்ளி கல்லூரிக்கு செல்லுங்கள் என ஆங்கிலத்தில் குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதை கண்ட அவரது மகன் தனது தாய்க்கு ஆங்கிலம் தெரியாது எனவும் இதில் சந்தேகம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து செல்போன் எங்கிருந்து இயங்குகிறது என போலீசார் தடயம் செய்ததில் லாரி ஓட்டுனரான கிருஷ்ணப்பன் வீட்டில் செல்போன் இருப்பது தெரிய வந்தது

இதனை அடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை செய்தபோது தமக்கு எதுவும் தெரியாது என முதலில் அவர் கூறியுள்ளார்,

பின்னர் போலீசார் தங்கள் பாணியில் கிருஷ்ணப்பனிடம் தொடர் விசாரணை மேற்கொண்டதில் அவர் கடந்த சனிக்கிழமை இரவு இளவரசியின் பிள்ளைகள் வீட்டில் இல்லாததை அறிந்து அவரது வீட்டுக்கு சென்றதும் அப்போது ஏன் சாப்பிட எதுவும் செய்யவில்லை என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கிருஷ்ணப்பன் இளவரசியை கன்னத்திலும் தலையிலும் பலமாக அடித்ததில் இளவரசி சம்பவ இடத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

மேலும் பயந்து போன அவர் அவரது கழுத்தை நெருக்கி கை கால்கள் ஆகியவற்றை கட்டி சாக்குப்பைக்குள் அவரது உடலை போட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வைத்து வாழை இலைகளை முழுவதுமாக சுற்றி வாழைத்தாரை எடுத்துச் செல்வது போல் வடுக்குப்பம் பகுதியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை பகுதியில் உள்ள கல் குவாரியின் குளத்தில் வீசி விட்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து இது குறித்து வானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த புதுச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு கொலையாளி கிருஷ்ணப்பனுடன் சென்று அவர் உடலை வீசிய இடத்தை அடையாளம் கண்டு தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டிருந்த இளவரசியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினர்.

தொடர்ந்து பெண் மாயம் என பதிவு செய்யப்பட்ட வழக்கை நெட்டப்பாக்கம் போலீசார் கொலை வழக்காக மாற்றி உள்ள நிலையில் கிருஷ்னப்பனை இன்று மாலை நீதிபதி மூன் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடுத்தனர்.

மேலும் கை கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் இருந்த இளவரசியின் உடலை அவரது மகனை அழைத்து போலீசார் அடையாளம் காண செய்தனர்.

அப்போது அவர் மகன் தாயின் உடலை கண்டு கதறி அழுதார். புதுச்சேரியில் கள்ளகாதலனால் பெண் அடித்து கொலை செய்யப்பட்டு குளத்தில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இறந்த பின்பும் இப்படியா..மனோஜ் சவப்பெட்டி மீது நடந்த மோசமான செயல்..பிரபலம் காட்டம்.!

நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார்.இந்த செய்தி திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியைக்…

1 minute ago

மாமே சவுண்ட் ஏத்து..தெறிக்க விடும் அனிருத்..’குட் பேட் அக்லி’ படத்தின் முக்கிய அப்டேட்.!

பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…

50 minutes ago

வாய்ப்பு தாறோம் வாங்க..கமல் பெயரில் மோசடி..எச்சரிக்கை விடுத்த நிறுவனம்.!

கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…

2 hours ago

உதயநிதிக்கு ஜால்ரா போடவா? கடுப்பான Ex அமைச்சர்.. மதுரையில் பரபரப்பு பேச்சு!

திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…

2 hours ago

பதில் சொல்லுங்க.. பதறி ஓடிய அமைச்சர்.. சட்டென முடிந்த திமுக ஆர்ப்பாட்டம்!

திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…

2 hours ago

இறங்கி அடித்த சியான் விக்ரம்…அசுர வசூலில் ‘வீர தீர சூரன்’.!

விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…

4 hours ago

This website uses cookies.