திருச்சி ; திருச்சியில் அனுமதியின்றி ஸ்பா பேரில் விபச்சாரம் செய்து வந்த விஜய் இயக்க நிர்வாகியை சென்னையில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
திருச்சி கருமண்டபம் சிங்கராயர் நகர் பகுதியில் இயங்கி வரும் ஸ்பாவில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக திருச்சி விபசார தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திருச்சி விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறை (பொறுப்பு) காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த வீட்டில் ஷைன் ஸ்பா என்ற பெயரில் கர்நாடகத்தை சேர்ந்த லட்சுமி தேவி என்பவர் இரண்டு பெண்களும் இருந்தனர்.
மேலும், வீட்டில் உள்ள பொருட்களை சோதனை செய்தபோது இந்த ஸ்பா சென்டர் உரிமை பெறாமல் பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக நடைபெறுவது தெரியவந்துள்ளது. இதையடுத்து அங்கிருந்த இரண்டு பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்துக்கு அனுப்பி அனுப்பி வைத்து, மேலாளர் லட்சுமி தேவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அந்த ஸ்பா நிறுவனம் திருச்சி வயலூர் பகுதியைச் சேர்ந்த தளபதி விஜய் மக்கள் இயக்க திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளராக செயல்பட்டு வரும் செந்தில் என்பவர் தான் இந்த பாவின் உரிமையாளர் என காவல்துறையினருக்கு தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவான செந்திலை தேடி வந்தனர். இந்நிலையில், இன்று ஸ்பா சென்டர் நடத்தி வந்த உரிமையாளர் செந்திலை விபச்சார தடுப்பு பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.