Categories: தமிழகம்

கள்ளக்காதலியை பெண் கேட்டு சென்ற வாலிபர்…. அரிவாளால் வெட்டிய தாய் – தந்தை : கோவையில் பகீர்!!

கோவை ராமநாதபுரம் கருப்பண்ண தேவர் வீதியை சேர்ந்தவர் வீரகுமார் (வயது 33). இவர் திருமண நிகழ்ச்சிகளுக்கு அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். கருத்துவேறுபாடு காரணமாக வீரகுமார் கடந்த 3 மாதங்களாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்தநிலையில் கடந்த 2017-ம் ஆண்டு இவர் கோவை ராமநாதபுரத்தில் நடந்த காதணி விழாவுக்கு அலங்காரம் செய்வதற்காக சென்றார். அப்போது வீரகுமாருக்கு திருமணமான இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த விவகாரம் அக்கம்பக்கத்தினர் மூலமாக இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதனையடுத்து இளம்பெண் தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு வடவள்ளி அருகே ஆண்டிபாளையத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று தங்கியிருந்தார்.

இளம்பெண் தனது பெற்றோரிடம் வீரக்குமாருடன் சேர்ந்து வாழ போவதாக கூறினார். இதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். சம்பவத்தன்று வீரகுமாரை தொடர்பு கொண்ட இளம்பெண் தன்னை திருமணம் செய்வது தொடர்பாக தனது பெற்றோரிடம் வந்து பேசுமாறு அழைத்தார்.

அதன்படி அவர் தன்னுடன் வேலை பார்க்கும் ராம்குமார், சதீஷ்குமார் ஆகியோருடன் ஆண்டிபாளையத்தில் உள்ள இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்றார். அவரது பெற்றோரை சந்தித்த வீரகுமார், உங்கள் மகளை எனக்கு 2-வதாக திருமணம் செய்து வையுங்கள் என கேட்டார்.

இது இளம்பெண்ணின் பெற்றோருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வீரகுமாரை கண்டித்தனர். இதனால் 2 தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.

அப்போது வீரகுமார், இளம்பெண்ணின் தந்தையை தாக்க முயன்றார். இதனை பார்த்த இளம்பெண்ணின் தாய் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வீரகுமாரின் மண்டையில் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வீரகுமாரை தாக்கியது இளம்பெண்ணின் தந்தையான சுப்பிரமணியம் (65), அவரது தாயார் தங்கமணி (57) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். கைதான சுப்பிரமணியம், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மெரினா கடலில் இளம்பெண்கள் செய்த செயலைப் பாருங்க.. ரோந்து போலீசார் பகீர் தகவல்!

சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…

19 minutes ago

வீர தீர சூரன் நான் இல்லை, நீங்கதான்- திண்டுக்கலில் சீயான் விக்ரம் செய்த சம்பவம்…

கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…

28 minutes ago

காரை துரத்திய பைக்.. கல் வீசி கண்ணாடி உடைப்பு : NH சாலையில் இளைஞர்கள் நடத்திய போதை ஆட்டம்!

காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…

52 minutes ago

துர்நாற்றம் வீசிய வீடு.. கொடூரமாகக் கிடந்த கருணாஸ் கட்சி நிர்வாகி.. சென்னையில் அதிர்ச்சி!

சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…

1 hour ago

செங்கோட்டையனும், விஜயும்.. அண்ணாமலை சொன்ன சீக்ரெட்!

மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…

2 hours ago