Categories: தமிழகம்

பெண்ணுடன் தகாத உறவு… காவல்துறையினர் மிரட்டியதாக ட்ராவல்ஸ் ஓனர் தூக்கு போட்டு தற்கொலை ; சிக்கிய பரபரப்பு கடிதம்..!!

திருச்சியில் தகாத உறவில் தொடர்பு விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் மிரட்டியதாக ட்ராவல்ஸ் அதிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் ரோடு , சாலை ரோடு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் சரவண செல்வன் (41). இவரது மனைவி லாவண்யா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியில் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில், சரவண செல்வன் அலுவலகத்திற்கு அருகில் வசிக்கும் தனலட்சுமி என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இந்நிலையில் சரவணன்செல்வன் அந்த பெண்ணுக்கு பல லட்சம் பணம் செலவு செய்து வந்ததாக தெரிகிறது. திடீரென்று தனலட்சுமியுடன் தொடர்பை சரவண செல்வன் நிறுத்திக் கொண்டார்.
தனலட்சுமி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சரவணா செல்வன் மீது புகார் கொடுத்ததாக தெரிகிறது.

இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் சரவணா செல்வனை அழைத்து புகார் மனு குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், நேற்று வீட்டில் இருந்த சரவணா செல்வன் இரவு வீட்டின் அறையில் தூங்குவதாக மனைவியிடம் கூறிவிட்டு அறைக்கு சென்றவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

விடியற்காலை நீண்ட நேரம் ஆகியும் கணவர் காலையில் அறையில் இருந்து வெளியே வராத காரணத்தால் சந்தேகம் அடைந்த மனைவி அறைக்கு சென்று பார்த்த பொழுது சரவண செல்வன் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு மனைவி லாவண்யா அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து ஸ்ரீரங்கம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உறவினர்கள் சரவண செல்வன் அறையில் இருந்த ஒரு கடிதத்தை கைப்பற்றி உள்ளனர். அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கு காரணம் தனலட்சுமி மற்றும் அவர் குடும்பத்தினர் தான் மரணத்திற்கு முழு பொறுப்பு இவர்களுடன் காவல்துறையில் பணியாற்றும் IS திருமூர்த்தி, ரைட்டர் முத்துசாமி, ஸ்ரீ ட்ரெய்லர் கடையில் வேலை செய்யும் செல்வி மகன் லிஷாந்த், மகள் ஜோசிகா தனலட்சுமி என் தாயார் மல்லிகா ஆகியோரும் இவருக்கு உதவியாக இசை அறிவழகன் ஆகியோர் பொறுப்பு, என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த சரவண செல்வனின் உறவினர்கள் சம்பந்தப்பட்ட தனலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் போலீசார் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று கூறி, சரவணசெல்வனின் உடலை வாங்க மறுத்து ஸ்ரீரங்கம் காவல் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டடனர்.

இந்த சம்பவத்தால் ஸ்ரீரங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

அதிமுக பாஜக கூட்டணி… எனக்கு ஒரு டவுட்டு : பரபரப்பு புகார் கூறிய கனிமொழி எம்பி!

தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…

9 hours ago

சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?

சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…

9 hours ago

Toxic மக்களே, நீங்க எப்படித்தான் வாழ்கிறீர்கள்? வைரலாகும் திரிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி…

பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…

11 hours ago

அண்ணாமலை மாற்றம் என அமித்ஷா பதிவிட்ட மறுநொடி.. காரில் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…

11 hours ago

ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?

இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…

12 hours ago

பொன்முடியின் கொச்சை பேச்சு.. ‘நாக்கு தவறி’ பேசியிருக்கலாம் : அமைச்சர் ரகுபதி ஆதரவு!

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…

12 hours ago

This website uses cookies.