கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள கிரிசெட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த அப்பைய்யா என்பவரது மகன் முருகேஷ் (28) இவர் டெம்போ ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார்.
அதே கிராமத்தை சேர்ந்த நஞ்சுண்டப்பா என்பவரது மகன் நரசிம்மன் (30) இவர் எலக்ட்டிரிசியன் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பாரதி (25) என்பருக்கும், டெம்போ ஓட்டுனர் முருகேஷூக்கும் கள்ள தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த நரசிம்மன் இருவரையும் கண்டித்துள்ளார். மேலும் கள்ள தொடர்பை விட்டு விடும்படியும் கூறியுள்ளார். ஆனால் முருகேஷ் கள்ள தொடர்பை தொடர்ந்துள்ளார். இதனால் அவர் மீது நரசிம்மன் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இதையும் படியுங்க: நவ.,28 முதல் திராவிட கூட்டத்திற்கு ரெட் அலர்ட் : பாஜக சுவரொட்டியால் பரபரப்பு!
இந்த நிலையில் நேற்று மாலை முருகேஷ் கிரிசெட்டிப்பள்ளி கிராமத்தில் சாலையில் நடந்து சென்றபோது நரசிம்மன் அவரை பின்தொடர்ந்து சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் நரசிம்மன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முருகேஷின் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த முருகேஷ் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அறிந்த தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி ஆனந்தராஜ் மற்றும் கெலமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்து விட்டு தப்பி ஓடிய நரசிம்மனை போலீசார் வலைவீசி தேடிவந்த நிலையில் அவரை பிடித்து கைது செய்தனர். இந்த கொலை குறித்து கெலமங்கலம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.