வேலூர் ; சட்ட விரோதமாக இரவு பகல் பாராமல் நடைபெற்று வரும் கள்ளச் சாராய விற்பனையை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த ரெட்டி மாங்குப்பம் ஆற்றாங்கரையோர பகுதிகளில் சட்ட விரோதமாக பட்டப்பகல் மற்றும் இரவு என இரண்டு வேலையும் கள்ளச்சாராய விற்பனை தொடர்ந்து வருகிறது. தினக்கூலிக்கு ஆட்களை வைத்து கள்ளசாராய விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து சட்டவிரோதமாக நடைபெற்று வரும் கள்ளசாராய விற்பனையால் கூலி தொழிலாளிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
கள்ளச்சாராய விற்பனையை தடுக்க வேலூர் மாவட்ட காவல்துறை தொடர்ந்து சாராய வேட்டை நடத்தி சாராய ஊரல் மற்றும் மூலப்பொருட்களை அழிக்கும் செயலில் ஈடுபட்டும், மேலும் கள்ளச்சாராய விபாயாரிகளை கைது செய்து வரும் நிலையில், இது போன்று கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருவது வாடிக்கையாகி வருகிறது.
இதனை காவல் துறை கடும் நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். கள்ளச்சாராய விற்பனை வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.