பழனி அருகே கீரனூரில் வீட்டில் வைத்து பெண்மணி ஒருவர் மது விற்பனை செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கீரனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகள் உள்ளது. கீரனூர் பேருந்து நிலையம் எதிரே மூதாட்டி ஒருவர் 24 மணி நேரமும் மது விற்பனை செய்து வருவதாகவும், அதிகாலை 3 மணி முதலே விற்பனையில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பள்ளி மாணவர்கள் முதற்கொண்டு மதுவை வாங்கி குடித்துவிட்டு சீர்கெட்டு வருவதாகவும், இதனால் பல இளைஞர்கள் குடும்பம் ஆதரவின்றி வருவதாகவும், இந்த மூதாட்டி கள்ளசந்தையில் அதுவும் வீட்டில் வைத்து மது விற்பனை செய்வதாகவும் எனக்கூறி பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.
இந்த நிலையில், கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்படும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கீரனூர் போலீசார் மற்றும் மதுவிலக்கு காவல்துறையினர் உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.