பெரம்பலூர் அருகே சட்டவிரோத மதுவிற்பனை குறித்து புகார் அளித்த நபரை அடுத்தே கொன்ற சம்பவத்தில் குடும்பத்தையே போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்ட எல்லையான பாடாலூர் அருகே ஊட்டத்தூர் செல்லும் பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரின் வீட்டின் அருகே சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்த சுரேஷ் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக தனது வீட்டில் மது விற்பனை செய்து வந்துள்ளார். அவரிடம் மதுவாங்க வருவோர் நள்ளிரவு வேளையில் ஆனந்தகுமார் வீட்டின் கதவை தட்டி மதுபானங்களை கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளனர்.
மேலும் படிக்க: குடியரசு தலைவருக்கே இந்த நிலைமையா..? இதுதான் பாஜக ஆட்சி ; கோபத்தில் கொந்தளித்த கனிமொழி..!!!
இதனை கண்டித்த ஆனந்தகுமார், சுரேஷிடம் நேரடியாக முறையிட்டுள்ளார். “பெண் பிள்ளைகள் இருக்கும் என் வீட்டில் இப்படி நள்ளிரவில் வருவோர் மதுபானம் கேட்டு தொந்தரவு செய்கின்றனர். உனது வீட்டின் முன்பாக மதுவிற்பனை பதாகை வைத்து விற்பனை செய்” எனக் கூறி சென்றுள்ளார். இருப்பினும் சுரேஷ் மது விற்பனையை தீவிரமாக செய்து வந்த நிலையில் நாளுக்குநாள் மது வாங்க வருவோர், தவறுதலாக ஆனந்தகுமார் வீட்டின் கதவை தட்டி மதுபானங்களை கேட்டுள்ளனர்.
இதையடுத்து ஆனந்தகுமார் பாடாலூர் காவல்நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். ஆனால், நடவடிக்கை ஏதும் எடுக்காததால் ஆனந்தகுமார், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்துள்ளார். இதை தெரிந்து கொண்ட சுரேஷ், ஆனந்தகுமாரை கொலை செய்ய திட்டமிட்டு, தனது குடும்பத்தினருடன் (மனைவி, 2 குழந்தைகள் உதவியுடன்) சேர்ந்து கடப்பரை மற்றும் கம்பி மற்றும் கற்களைக் கொண்டு ஆனந்தகுமாரை தாக்கியுள்ளார். இதில் அவர் அங்கேயே உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாடாலூர் காவல்நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து தப்ப முயன்ற சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை கைதுசெய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மனைவி கீதாவை திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கவும், சிறுவர்கள் இருவரும் திருச்சியில் உள்ள சிறார் சிறைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
ஸ்ருதிஹாசனின் பிரேக்கப் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார். இருவரும் லிவ்…
This website uses cookies.