மணல் கொள்ளை தொடர்பாக போலீஸில் புகார் அளித்த சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.
பெரிய பாளையம் அடுத்துள்ள மண்வாசல் பகுதியில் உள்ள மணல் குவாரியில், விதிகளை மீறி சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக முதல்வரின் தனிப்பிரிவிற்கும், காவல்துறைக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நாகராஜ் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட கல்குவாரி மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த மணல் குவாரியின் ஆதரவாளரான நடராஜ் என்பவர் சமூக ஆர்வலர் நாகராஜை தொலைபேசியில் அழைத்து மிரட்டிய ஆடியோ வெளியானது.
அந்த ஆடியோ பதிவில், “நா வந்ததுக்கு அப்புறம் பாரு. உயிர் போச்சுனா ஈசியா செத்துருவ நீ. பெட்டிசன் கைலதான எழுதுற. நீ பாரு. நீ மட்டும் பேக் வாங்குனா உன்ன கொண்ணே புடுவேன். தெரியாம பண்ணிட்டேன். இனிமே பண்ண மாட்டேன் அப்படினு சொல்லி வாங்குன. இப்போ நீ எல்லாத்துக்கும் துணிஞ்சு பேசிட்ட. அதே மாதிரி இருக்கனும்”, என சமூக ஆர்வலர் நாகராஜை நடராஜ் மிரட்டியுள்ளார்.
இந்த ஆடியோ வெளியான நிலையில், அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…
காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…
டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…
பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.! நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை…
நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது கடைசிபடம் ஜனநாயகன் தான் என கூறியுள்ள நிலையில் தமிழக…
This website uses cookies.