தமிழகம்

நயன்தாராவே அப்படித்தான்.. வாடகைத்தாய் விண்ணப்பத்தால் சிக்கிய கும்பல்!

சென்னையில் கணவரைப் பிரிந்து வாழ்ந்த பெண் வாடகைத்தாய் விண்ணப்பம் செய்திருப்பதன் பின்னணியில் ஒரு கும்பல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

சென்னை: சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் மாவட்ட வாடகைத்தாய் கலந்தாய்வுக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்று உள்ளது. இந்தக் கூட்டத்தில், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொடுப்பதற்காக விண்ணப்பித்தோரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தன.

அப்போது, திருவொற்றியூரைச் சேர்ந்த தமிழரசி என்ற பெண் அதிகாரிகள் முன் ஆஜரானார். அவரிடம் விசாரிக்கையில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து உள்ளார். பின்னர், தீர விசாரித்தபோது, கார்த்திக் என்பவர் உடன் தமிழரசிக்கு திருமணம் ஆனதாக அவர் சமர்பித்த பத்திரிக்கை போலி எனக் கண்டறியப்பட்டது.

அது மட்டுமல்லாமல், அவரது முதல் கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த தமிழரசி, அவரது புகைப்படம் மற்றும் பத்திரிக்கையைச் சமர்பித்து இருந்து உள்ளார். எனவே, உடனடியாக இது குறித்து தேனாம்பேட்டை போலீசாருக்கு தமிழரசியிடம் விசாரணை செய்த மருத்துவக் குழுவினர் தகவல் அளித்து உள்ளனர்.

இதன் பேரில் விசாரணை செய்த போலீசார், இடைத்தரகராக செயல்பட்ட மஞ்சு ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோவையைச் சேர்ந்த தம்பதி, குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்ற சான்றிதழைப் பெற்று உள்ளனர். மேலும், அவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற விரும்பி உள்ளனர்.

இந்த விருப்பத்தை, தனியார் கருத்தரித்தல் மையத்தில் பணிபுரியும் பெண் ஒருவரிடம் கூறி உள்ளனர். இதற்கு 5 லட்சம் ரூபாய் வரை செலவாகும் எனக் கூறியதற்கு தம்பதியும் ஒப்புக் கொண்டு உள்ளனர். பின்னர், தம்பதியை பெண் ஊழியர், மஞ்சு மூலம் தமிழரசியிடம் அழைத்து வந்து உள்ளார்.

இதையும் படிங்க: Ex டிஐஜி மகன் வீட்டில் ஆப்பிரிக்க பெண்களை வைத்து பாலியல் தொழில்.. கூண்டோடு சிக்கியது எப்படி?

பின்னர், தமிழரசி கணவரைப் பிரிந்து வாழ்வது, அவரது பொருளாதார நிலையை வைத்து, வாடகைத்தாய் முறை சட்டவிரோதம் அல்ல என்றும், நயன்தாரா போன்றோரே வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர் என்றும் கூறி மூளைச்சலவை செய்து உள்ளார். பின்னர், அதற்கு தமிழரசி ஒப்புக் கொண்டு உள்ளார்.

இந்த நிலையில் தான், அதற்கான விண்ணப்ப பரிசீலனையின்போது தமிழரசி சிக்கி, இடைத்தரகராக செயல்பட்ட மஞ்சுவும் சிக்கி இருப்பது தெரிய வந்து உள்ளது. இதனையடுத்து, தனியார் கருத்தரித்தல் மைய பெண் ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

1 hour ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

2 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

3 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

3 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

4 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

4 hours ago

This website uses cookies.