சென்னையில் கணவரைப் பிரிந்து வாழ்ந்த பெண் வாடகைத்தாய் விண்ணப்பம் செய்திருப்பதன் பின்னணியில் ஒரு கும்பல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
சென்னை: சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் மாவட்ட வாடகைத்தாய் கலந்தாய்வுக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்று உள்ளது. இந்தக் கூட்டத்தில், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொடுப்பதற்காக விண்ணப்பித்தோரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தன.
அப்போது, திருவொற்றியூரைச் சேர்ந்த தமிழரசி என்ற பெண் அதிகாரிகள் முன் ஆஜரானார். அவரிடம் விசாரிக்கையில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து உள்ளார். பின்னர், தீர விசாரித்தபோது, கார்த்திக் என்பவர் உடன் தமிழரசிக்கு திருமணம் ஆனதாக அவர் சமர்பித்த பத்திரிக்கை போலி எனக் கண்டறியப்பட்டது.
அது மட்டுமல்லாமல், அவரது முதல் கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த தமிழரசி, அவரது புகைப்படம் மற்றும் பத்திரிக்கையைச் சமர்பித்து இருந்து உள்ளார். எனவே, உடனடியாக இது குறித்து தேனாம்பேட்டை போலீசாருக்கு தமிழரசியிடம் விசாரணை செய்த மருத்துவக் குழுவினர் தகவல் அளித்து உள்ளனர்.
இதன் பேரில் விசாரணை செய்த போலீசார், இடைத்தரகராக செயல்பட்ட மஞ்சு ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோவையைச் சேர்ந்த தம்பதி, குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்ற சான்றிதழைப் பெற்று உள்ளனர். மேலும், அவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற விரும்பி உள்ளனர்.
இந்த விருப்பத்தை, தனியார் கருத்தரித்தல் மையத்தில் பணிபுரியும் பெண் ஒருவரிடம் கூறி உள்ளனர். இதற்கு 5 லட்சம் ரூபாய் வரை செலவாகும் எனக் கூறியதற்கு தம்பதியும் ஒப்புக் கொண்டு உள்ளனர். பின்னர், தம்பதியை பெண் ஊழியர், மஞ்சு மூலம் தமிழரசியிடம் அழைத்து வந்து உள்ளார்.
இதையும் படிங்க: Ex டிஐஜி மகன் வீட்டில் ஆப்பிரிக்க பெண்களை வைத்து பாலியல் தொழில்.. கூண்டோடு சிக்கியது எப்படி?
பின்னர், தமிழரசி கணவரைப் பிரிந்து வாழ்வது, அவரது பொருளாதார நிலையை வைத்து, வாடகைத்தாய் முறை சட்டவிரோதம் அல்ல என்றும், நயன்தாரா போன்றோரே வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர் என்றும் கூறி மூளைச்சலவை செய்து உள்ளார். பின்னர், அதற்கு தமிழரசி ஒப்புக் கொண்டு உள்ளார்.
இந்த நிலையில் தான், அதற்கான விண்ணப்ப பரிசீலனையின்போது தமிழரசி சிக்கி, இடைத்தரகராக செயல்பட்ட மஞ்சுவும் சிக்கி இருப்பது தெரிய வந்து உள்ளது. இதனையடுத்து, தனியார் கருத்தரித்தல் மைய பெண் ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.