தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும் என்பதால் தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை, வானிலை ஆய்வு மையத்திலிருந்து பெறப்பட்ட மின்னஞ்சல் செய்தியில், 02.01.2024 முதல் 05.01.2024 வரை உள்ள தேதிகளில் குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40-45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் சூழல் காற்று வீசக்கூடும் என்பதாலும், மேலும், தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும், மீனவர்கள் தங்களின் படகுகளை உயரமான மற்றும் பாதுகாப்பான முறையில் நிறுத்தி வைப்பதுடன், தங்களின். மீன்பிடி உபகரணங்களையும் பாதுகாப்பாக வைத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும் தருவைக்குளத்தைச் சேர்ந்த சேர்ந்த விசைப்படகுகள் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மீன்பிடிப்பில் ஈடுபட வேண்டாம் எனவும், இப்பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும் விசைப்படகு மீனவர்கள் அருகிலுள்ள துறைமுகத்திற்கு கரை திரும்புமாறும் தூத்துக்குடி உதவி இயக்குநர் விஜயராகவன் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த 30ந் தேதி முதல் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மாவட்டத்தில் உள்ள சுமார் 450 விசைப்படகுகள், 5 ஆயிரம் நாட்டு படகுகள் கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
This website uses cookies.