பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தான் ஆர்ஆர்ஆர். இந்த திரைப்படம் வரும் மார்ச் 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளன.
மேலும் இந்த படத்தில், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா, ஒலிவியா மோரிஸ், சமுத்திரகனி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்திலும் இந்த படம் வெளியாகவுள்ளது.
ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தை பார்க்க உலக ரசிகர்களே ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், கர்நாடக ரசிகர்கள் அந்த படத்தை கர்நாடகாவில் ஒரு திரையரங்குகளில் கூட வெளியிடக் கூடாது என்றும், படத்தை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்றும் #BoycottRRRinKarnataka என்ற ஹாஷ்டேக்கை இந்தியளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
தற்போது திடீரென இப்படியொரு எதிர்ப்பு கிளம்ப என்ன காரணம் என்பதற்கும் தெளிவாக விளக்கம் கொடுத்து விளாசி வருகின்றனர் அம்மாநில இளைஞர்கள்.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம் கன்னட மொழியில் உருவாகாதது தான் இந்த எதிர்ப்புக்கு காரணம் என்கின்றனர். கன்னட மொழியை புறக்கணித்து விட்டு பான் இந்தியா படமென ராஜமெளலி பிரச்சாரம் செய்வதால் கன்னடர்கள் இந்த படத்திற்கு எதிரான எதிர்ப்பு குரலை கொடுத்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கு தான் அதிகம் முக்கியத்துவம் தரப்பட்டு இருப்பதாகவும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
This website uses cookies.