பாஜகவினருக்கு முக்கிய Assignment..ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கும் அண்ணாமலை!!
சென்னையில் பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க வருமாறு பாஜக மாவட்ட தலைவர்களை அழைத்த அண்ணாமலை சிலிண்டர் விலை குறைப்பில் மத்திய அரசின் பங்கு பற்றி விரிவாக பேசியிருக்கிறார்.
சமூக் வலைதளங்களிலும், கிராமப்புறங்களிலும் இதனை நிர்வாகிகள் கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதேபோல் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பது குறித்தும் நிர்வாகிகள் ஆர்வமுடன் பரப்புரை செய்யாததை சுட்டிக்காட்டி அதிலும் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இதனிடையே காங்கிரஸ் ஆட்சியில் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டரை 1200 ரூபாயாக அதிகரித்து அதில் 200 ரூபாய் குறைப்பதில் என்ன ஆச்சரியம் என திமுகவினரும், காங்கிரஸ் கட்சியினரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
இதற்கு உரிய பதிலடி கொடுப்பதற்கு சமூக வலைதள நிர்வாகிகளுக்கு ஐடியாக்கள் வழங்கியுள்ளார் அண்ணாமலை. இதனால் இனி வரும் நாட்களில் சமூக வலைதளங்களில் கருத்து யுத்தம் பலமாக இருக்கும் எனத் தெரிகிறது
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
சென்னையில், இன்று (மார்ச் 10) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 50…
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம்…
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். துபாய்: 9வது ஐசிசி…
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
This website uses cookies.