Categories: தமிழகம்

காய்கறிகளை பதப்படுத்தும் நிலையத்தை ஆக்கிரமித்த ‘குடி’மகன்களால் இடையூறு.. குமுறும் விவசாயிகள்..!

ஆரணியில் விவசாயிகளின் காய்கறிகளை பதப்படுத்த 4 கோடி 20 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட நிலையம் மது அருந்தி செல்லும் இடமாக மாறிய அவலம் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் அதிக அளவில் கீரைகள் மற்றும் காய்கறி உள்ளிட்ட தோட்ட பயிர்களும் தர்பூசணி, மாம்பழம், வாழை உள்ளிட்டவைகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் முக்கிய மையமாக விளங்குகிறது.

இந்த நிலையில், விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கையை ஏற்று அப்பகுதியில் காய்கறி மற்றும் பழங்களை பதப்படுத்தும் வகையில் தமிழக அரசால் சுமார் 4 கோடி 20 லட்ச ரூபாய் மதிப்பில் காய்கறிகள் பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்பட்டது நாள்தோறும் 20 டன் காய்கறி பழம் வரை அப்பகுதியில் விற்பனை செய்யப்படுவதால் விளைச்சல் அதிகமான காலங்களில் அதனை பதப்படுத்தி விற்பனை செய்வதற்காக அமைக்கப்பட்டு திறக்கப்பட்ட நிலையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வராமலேயே அந்த நிலையம் பதப்படுத்தப்படும் குளிரூட்டும் அரை மின்விசிறி மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டு பல பொருட்கள் திருடப்படும் உள்ளது.

மேலும், நிலையத்தில் அனைத்து இடங்களிலும் மதுபான விடுதியை போன்று மதுபானங்கள் அருந்திவிட்டு அங்கேயே வீசி உடைத்துவிட்டு செல்லும் நிலையில் உள்ளது காவலாளிகள், நிலையத்தை பராமரிக்க தேவையான ஊழியர்கள் ‘சிசிடிவி’ கேமரா போன்ற வசதிகள் செய்யப்படாததால், இங்குள்ள குளிர்சாதன இயந்திரங்கள், ஜெனரேட்டர் உள்ளிட்டவைகளும் பாதுகாப்பற்ற முறையில் உள்ளது வேளாண்துறை வணிக பிரிவினர் முதன்மை பதப்படுத்தும் நிலையத்தை முறையாக விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் காலம் தாழ்த்தியதால் தற்போது இந்த நிலையும் முற்றிலும் வீணாகிப் போனது தொடர்ந்து இதனை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர பல லட்சம் செலவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

வேளாண் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் உரிய பராமரிப்பின்றி காய்கறிகள் பதப்படுத்தும் நிலையம் மது பிரியர்களின் மது அருந்தும் இடமாக மாறியுள்ளது பார்ப்பதற்கே வேதனை அளிக்கும் விதமாக உள்ளது.

Poorni

Recent Posts

Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…

டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…

1 day ago

முதல் படமே ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்? ஆனா விதி வேலையை காட்டிருச்சு- புலம்பித் தள்ளிய ஸ்ரீகாந்த்

சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…

1 day ago

அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி, செந்தில்பாலாஜி பதவிகளை பறிக்க வேண்டும் : திடீரென வந்த எதிர்ப்பு குரல்!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…

1 day ago

‘அந்த’ வீடியோக்களை வெளியிட்ட நடிகர்.. நல்லா இருந்த மனுஷனுக்கு என்னாச்சு? ஷாக் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…

2 days ago

பிரபல கிரிக்கெட் வீரரின் பயோபிக்கை இயக்கும் பா.ரஞ்சித்? ஆச்சரிய தகவல்

புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…

2 days ago

டிராலி சூட்கேஸில் காதலி… பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் அழைத்து சென்ற காதலனின் விநோத முயற்சி : டுவிஸ்ட்!

தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…

2 days ago

This website uses cookies.