மிட் நைட்டில் சைக்கிளில் ரவுண்ட்ஸ்…ரோந்து காவலர்களுக்கு ஷாக் கொடுத்த பெண் ஐபிஎஸ் அதிகாரி: பாராட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி நள்ளிரவில் சைக்கிளில் ரோந்து பணி மேற்கொண்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் சென்னை காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி தனது கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதியில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு ரோந்து காவலர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.

இரவு நேரத்தில் காவல்துறை வாகனங்களில் சென்று ரோந்து பணியில் ஈடுபடுவதை விட சைக்கிளில் ரோந்து பணி செல்ல திட்டமிட்டு, நேற்று இரவு சாதாரண உடையில் சைக்களில் பயணம் மேற்கொண்டார். இந்த ரோந்து பணியின் போது இரவு காவலர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் திட்டமிட்டார்.

இதற்காக திடீரென சைக்களில் புறப்பட்ட அவர் தனது கட்டுப்பாட்டுக்குட்பட்ட 8 காவல்நிலையத்தை 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு சைக்களில் சென்று ஆய்வு செய்தார். அதிகாலை 2.45 மணிக்கு வாலாஜா சாலையில் தொடங்கி முத்துசாமி பாலம், ராஜா அண்ணாமலை மன்றம், குறளகம் வால் டாக்ஸ் சாலை, வழியாக சென்றவர், அதிகாலை 4.15 மணிக்கு ஸ்டான்லி சுரங்கப்பாதையில் தனது ரோந்து பணியை முடித்தார்.

அப்போது காவல் ரோந்து வாகனம் மற்றும் காவல்நிலையங்களில் பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். இரவு நேரத்தில் நடைபெறுகின்ற சட்ட ஒழுங்கு பிரச்சனை மற்றும் இரவு நேர அவசர அழைப்புகளுக்கு காலவர்களின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த இணை ஆணையர் ரம்யா பாரதி, இரவு நேரத்தில் சைக்களில் ரோந்து மேற்கொண்டது புதுவகையான அனுபவமாக இருந்ததாக தெரிவித்தார். பெண் இணை ஆணையரின் இரவு ரோந்து தொடர்பாக படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து காவல் துறை உயர் அதிகாரிகள் ரம்யா பாரதியை பாராட்டி வருகின்றனர்.


இந்தநிலையில் துபாய் பயணம் மேற்கொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த தகவல் கேள்விபட்டு,ரம்யா பாரதியை பாராட்டி ட்வீட் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் ‘பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை குறைக்கவும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டு உள்ளேன். தமிழக போலீஸ் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதில் இரும்புக்கரம் கொண்டு செயல்படும்’ என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

10 hours ago

எங்க கூட்டணிக்கு வந்தால் விஜய் வெற்றி பெற முடியும்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் கணிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…

10 hours ago

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள் : ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு!

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…

11 hours ago

போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க வந்த பெண் மானபங்கம்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…

11 hours ago

திடீரென ரஜினி கொடுத்த பரிசு.. ஆச்சரியத்தில் ஆடிப்போன இயக்குநர்..!!

இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…

11 hours ago

அடுத்தடுத்து மாயமான இளைஞர்கள் கொன்று புதைப்பு.. வெளியான பகீர் தகவல்!

கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…

12 hours ago

This website uses cookies.