கோவை: கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் உள்ள 811 இடங்களுக்கு 4,524 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள், 7 நகராட்சிகளில், 198 வார்டுகள், 33 பேரூராட்சிகளில் 513 வார்டுகள் சேர்த்து 811 வார்டுகளுக்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 28ம் தேதி தொடங்கியது.
இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதிநாளான நேற்று மாநகராட்சியில் 778 பேர், 7 நகராட்சிகளில் 638 பேர், 33 பேரூராட்சிகளில்,1506 பேர் என மொத்தமாக 2,922 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கு 1,128 பேர், 7 நகராட்சிகளில் 198 வார்டுகளில் 1,051 பேர், 33 பேரூராட்சிகளில் 513 வார்டுகளில் 2,345 பேர் சேர்த்து மொத்தமாக 4,524 பேர் வேட்புனு தாக்கல் செய்துள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
"சென்னை 28" மூன்றாம் பாகம் வருகிறதா? கங்கை அமரனின் மகன் வெங்கட்பிரபு,தன்னுடைய திரைப்பயணத்தை நடிகராக தொடங்கினார்.உன்னை சரணடைந்தேன்,ஏப்ரல் மாதத்தில்,சிவகாசி உள்ளிட்ட…
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி,ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படத்தின் டீசர்…
இந்திய அணியின் மறக்க முடியாத தோல்வி! கடந்த 2000 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா…
பாஜக - அதிமுக கூட்டணி குறித்து 6 மாதத்திற்கு எந்த ஒரு கேள்வியையும் கேட்க வேண்டாம் என தமிழிசை செளந்தரராஜன்…
பட வாய்ப்புக்காக அலையும் காக்கா முட்டை ரமேஷ் தமிழ் சினிமாவில் 2015-ஆம் ஆண்டு இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான ‘காக்கா…
திருவாரூர் அருகே காதல் திருமணம் செய்த மனைவியைக் கொலை செய்து விட்ட தப்பி ஓடிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.…
This website uses cookies.