கோவை: கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் உள்ள 811 இடங்களுக்கு 4,524 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள், 7 நகராட்சிகளில், 198 வார்டுகள், 33 பேரூராட்சிகளில் 513 வார்டுகள் சேர்த்து 811 வார்டுகளுக்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 28ம் தேதி தொடங்கியது.
இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதிநாளான நேற்று மாநகராட்சியில் 778 பேர், 7 நகராட்சிகளில் 638 பேர், 33 பேரூராட்சிகளில்,1506 பேர் என மொத்தமாக 2,922 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கு 1,128 பேர், 7 நகராட்சிகளில் 198 வார்டுகளில் 1,051 பேர், 33 பேரூராட்சிகளில் 513 வார்டுகளில் 2,345 பேர் சேர்த்து மொத்தமாக 4,524 பேர் வேட்புனு தாக்கல் செய்துள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.