கோவையில் பெண் வழக்கறிஞர்களிடம் அத்துமீற முயன்ற மதுபோதை ஆசாமி : பெண்களை கையை பிடித்து இழுப்பதை வீடியோ எடுக்காமல் இதை எடுக்கிறியா ? செய்தியாளர்களிடம் அடாவடியில் காவல் துறை ஈடுபட்டனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பெண் வழக்கறிஞர்கள் இருவர் ஸ்டேட் பேங் சாலை வழியாக வந்து கொண்டு இருந்த போது, அவர்களை பின் தொடர்ந்த மதுபோதை ஆசாமி பெண் வழக்கறிஞர்களிடம் அத்துமீற முயன்றதாக தெரிகிறது. இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பணியில் இருந்த போலீசாரிடம் பெண் வழக்கறிஞர்கள் இது குறித்து தெரிவித்த நிலையில் போலீசார் அந்த மர்ம நபரை பிடித்து விசாரித்து வந்தனர்.
இதை வீடியோ எடுத்த செய்தியாளரிடம் வீடியோ பதிவு செய்ய விடாமல் தடுத்ததுடன், பெண்களை கையை பிடித்து இழுப்பதை வீடியோ எடுக்காமல் ? போலீசார் விசாரிப்பதை வீடியோ எடுப்பதா ? என்று கூறி பெண் வழக்கறிஞரை பின் தொடர்ந்து வந்த மதுபோதை ஆசாமியை போலீசார் தப்ப விட்டனர்.
மேலும், இதுகுறித்து காவல்துறை தரப்பில் கேட்டதற்க்கு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரிப்பதாக தெரிவித்து உள்ளனர்.அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவரிடம் அத்துமீறலில் ஈடுபட முயன்ற வடமாநில இளைஞர் பரபரப்பு அடங்கும் முன்பாக தற்பொழுது பெண் வழக்கறிஞரை பின் தொடந்து வந்த மது போதை ஆசாமியால் மீண்டும் கோவையில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
This website uses cookies.