தனியார் செயலி மூலம் பணத்தை முதலீடு செய்ய வைத்து கோடிக்கணக்கில் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட மக்கள் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஜிஎம்ஆர் (GMR) எனும் செயலியில் தினமும் 10 நிமிடம் வேலை செய்தால் வாரம்தோறும் சம்பளம் வரும் எனவும் அதற்கு முதலீடு செய்ய வேண்டுமென கோவை மதுக்கரை பகுதியை சேர்ந்த முபசீரா என்ற பெண் விளம்பரப்படுத்தியுள்ளார். இதனை நம்பி பலரும் 15 ஆயிரம் முதல் 3 அரை லட்சம் வரை பணத்தை முதலீடு செய்துள்ளனர்.
அதில், வாரம் தோறும் தொகைக்கு தகுந்தார் போல் பணம் முதலீடு செய்தர்களின் வங்கி கணக்கிற்கு பணம் வருவதாக கூறியுள்ளனர். இதனை அறிந்த மக்கள் பலரும் இந்த செயலில் முதலீடு செய்து வேலை பார்த்து வந்துள்ளனர். ஆனால், கடைசி வரை எந்த சம்பளமும் வராததை அறிந்த மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இதனை அடுத்து ஏமாற்றம் அடைந்த கோவையை சேர்ந்த சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்துள்ளனர்.
இதில், பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், இந்த ஜி.எம்.ஆர் ஆப் மூலம் தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்ய வைத்து கோடிக்கணக்கில் ஏமாற்றியுள்ளதாகவும் அவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்று தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.