விழுப்புரம் டவுன் காவல் நிலைய வாயில் முன்பு அரசு பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் ரீல்ஸ்செய்து வெளியிடுவது என்பது பொதுமக்கள் மத்தியில் பரவலாக இருந்து வருகிறது. ரீல்ஸ் செய்யும் போது பிறந்த நாள் கேக்குகளை பட்டா கத்தியால் வெட்டி சமூக வலைதளங்களில் பதிவிடக்கூடாது எனவும் அப்படி செய்தால் அவர்கள் மீது நடவடிக்கையும் தமிழக காவல் துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் விழுப்புரம் காமராஜர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் டவுன் காவல் நிலையம் முன்பு ரீல்ஸ் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ பதிவானது விழுப்புரம் பகுதியில் வைரலானதை தொடர்ந்து டவுன் போலீசார் விசாரனை செய்ததில் விழுப்புரம் பெரிய காலனி பகுதியை சார்ந்த கோகுல் என்ற மாணவன் உணவு இடைவேளையின் போது பள்ளிக்கு அருகிலுள்ள காவல் நிலையத்தில் தண்ணீர் அருந்த வரும்போது தனது நண்பருடன் இணைந்து ரீல்ஸ் செய்து வெளியிட்டதது தெரியவந்தது.
இதனையடுத்து இரு மாணவர்களையும் அழைத்து போலீசார் இது காவல் நிலைய வாயில் முன்பு ரீல்ஸ் வீடியோ செய்ய கூடாது என எச்சரிக்கை செய்தும், அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.
சிலிக் ஸ்மிதா என்று சொன்னால் இளைஞர்களின் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துவிடும். பழகுவதற்கு இனிமையா நபர் என பிரபலங்கள் போற்றப்படும் சிலிக்…
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
This website uses cookies.