Categories: தமிழகம்

டாஸ்மாக் கடைகளில் அமைச்சர் பெயரை சொல்லி கமிஷன் கேட்டு மிரட்டும் ரவுடிகள் : பாதுகாப்பு கேட்டு ஊழியர்கள் போராட்டம்!!

தேனி மாவட்ட டாஸ்மாக் கடைகளில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரைச் சொல்லி கமிஷன் கேட்டு ரவுடிகள் மிரட்டுவதாகவும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கேட்டு டாஸ்மாக் ஊழியர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரை சொல்லி, “கரூர் கம்பெனி” என்ற பெயரில் வரும் ரவுடிகள், தேனி மாவட்டத்தில் உள்ள 92 டாஸ்மாக் மதுபான கடை விற்பனையில் 30 சதவீதம் பணம் கேட்டும் பணம் கொடுக்காத கடைகளை அடைக்கச் சொல்லியும் மிரட்டுவதாக டாஸ்மாக் ஊழியர்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.

அவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரைச் சொல்லி மிரட்டும் வடிவேல், சதீஷ் உள்ளிட்ட ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், டாஸ்மாக் ஊழியர்களை பாதுகாக்கவும் டாஸ்மாக் ஊழியர் கூட்டமைப்பு சார்பில் தேனி ஆட்சியர் சஜீவனாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, தேனி கருவேலநாயக்கன்பட்டியில் இயங்கும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் மற்றும் மதுபான கிடங்கிற்கு சென்ற முன்டாஸ்மாக் ஊழியர கூட்டுக் குழுவினர் அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுட்டனர்.

பின், மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்குள் நுழைந்து, அங்கு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். டாஸ்மாக் மேலாளரிடம் இது குறித்த கோரிக்கை மனுவை அளித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டாஸ்மாக் ஊழியர்களின் கூட்டுக் குழுத் தலைவர் மோசன் கூறியதாவது: அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரைச் சொல்லி மாவட்ட முழுவதும் ஒன்றை கோடி ரூபாய்க்கு மேல் கரூர் கம்பெனி என்ற பெயரில் வந்தவர்கள் வசூல் செய்கிறார்கள்.

ஊழியர்களை மிரட்டுகிறார்கள். பணம் கொடுக்காத கடைகளை அடைக்க சொல்லி அமைச்சர் பெயரால் டாஸ்மாக் நிர்வாகத்தை மிரட்டுகிறார்கள்.

அந்த கும்பல் அடக்கச் சொல்லும் கடையை வாய்மொழி உத்தரவு மூலம் நிர்வாகத்தினர் அடைகிறார்கள். அந்த நெருக்கடிக்கு மாவட்ட நிர்வாகம் ஆளாகி இருக்கிறது.

ஒரு லட்சம் ரூபாய்க்கு 30 ஆயிரம் ரூபாய் பணம் வசூலிக்கும் அவர்கள், மதுபானத்தை அதிக விலைக்கு விற்க சொல்லி வற்புறுத்துகிறார்கள்.

இவ்வாறாக அரசின் பெயரை எடுக்கும் நோக்கில் அமைச்சரின் பெயரைச் சொல்லி பணம் வசூல் செய்யும் இந்த ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .

விசாரணை செய்வதாக மாவட்ட ஆட்சியர் சொல்லியிருக்கிறார். மீண்டும் அமைச்சர் பெயரை சொல்லி கரூர் கம்பெனியினர் வந்தால் அனைத்து கடைகளையும் பூட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஊரையே காலி செய்கிறேன்.. திடீரென புறப்பட்ட பிரபலம்.. என்ன காரணம்?

பாலிவுட்டில் எதார்த்தம் இல்லை எனக் கூறியுள்ள அனுராக் காஷ்யப், விரைவில் மும்பையை காலி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். மும்பை: இது…

1 minute ago

நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!

உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…

11 hours ago

‘பேட் கேர்ள்’ டீசர் விவகாரம்…கூகுளுக்கு பறந்த நோட்டீஸ்..நீதிமன்றம் கெடுபிடி.!

படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…

12 hours ago

ரஜினியை சந்தித்த பிரபல தயாரிப்பு நிறுவனம்…படத்தின் ஷூட்டிங் ஆரம்பம்.!

ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…

13 hours ago

சாய் அபயங்கருக்கு அடிச்சது ஜாக்பாட்.. முன்னணி நடிகருடன் இணைகிறார்!

பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…

13 hours ago

சிவாஜியின் வீடு பிரபுக்கு சொந்தம்…ஜப்தி உத்தரவை எதிர்த்து ராம்குமார் மனு.!

வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…

14 hours ago

This website uses cookies.