Categories: தமிழகம்

கடைசியா சுடுகாடு செல்ல கூட வழியில்ல… கரும்பு தோட்டத்தில் சடலத்தை எடுத்து சென்ற அவலம் : பொதுமக்கள் கவலை!!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தென்பசார் ஊராட்சிக்குட்பட்ட அவனம்பட்டு கிராமத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவனம்பட்டு காலனி பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு சுமார் 25 சென்ட் அளவிற்கு குறைந்த அளவு சுடுகாடு உள்ளது. இதற்கு முறையான பாதை வசதியும் இல்லை.

இந்த நிலையில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ஏழுமலை என்பவருக்கு சொந்தமான 1 ஏக்கர் 60 சென்ட், விவசாய நிலத்திற்கு இடையே சுடுகாடு பாதைக்காக அரசு சார்பில் சாலை அமைத்துள்ளனர்.

இதுகுறித்து ஏழுமலை என்பவர் மகன் ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெற்றுள்ளார் இந்த நிலையில் இன்று அதே பகுதியில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன் காரணமாக தடை உத்தரவு பிறப்பித்துள்ள வழியாக உடலை எடுத்துச் செல்லக்கூடாது என வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் தெரிவித்ததால் இருந்த மூதாட்டியின் உடலை சாலையிலே வைத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினரின் பேச்சுவார்த்தையை அடுத்து அங்கிருந்த கரும்பு தோட்டங்கள் வழியாக மூதாட்டியின் உடலைஎடுத்துச் சென்றனர்.

இதனால் கரும்பு தோட்டத்தில் இருந்த கரும்பு பயிர்கள் முழுவதும் சேதமடைந்தது. இதே கிராமத்தில் அந்த சுடுகாடுக்கு அருகிலேயே அரசுக்கு சொந்தமான 3 ஏக்கர் 80 சென்ட் நிலம் உள்ளது.

அதில் சுடுகாடு அமைத்தால் எந்த தரப்பிற்கும் பிரச்சனை இல்லாமல் இருக்கும் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ரஜினியோட அந்த வீடீயோவை ரிலீஸ் பண்ணுங்க..எல்லோரும் பார்க்கட்டும்..ரம்யா கிருஷ்ணன் பர பர பேச்சு.!

ரஜினிக்கு நிகர் வேற யாரும் இல்லை.! ரஜினியின் மேக்கிங் வீடீயோவை சீக்கிரமாக ரிலீஸ் பண்ணுங்க,பல பேருக்கு அது உதவும் என…

9 hours ago

IPL போட்டியில் சில உடைகளுக்கு தடை விதித்த பிசிசிஐ..குடும்பத்தினருக்கும் கட்டுப்பாடு.!

பிசிசிஐ புதிய விதிகள் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வீரர்களுக்கும்,அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ பல புதிய விதிமுறைகளை விதித்திருப்பது…

10 hours ago

என்கூட நடிக்க மறுத்தார்..தனுஷ் செய்தது சரியா..வெளிப்படையாக பேசிய பார்த்திபன்.!

பேட்டக்காரனாக நடிக்க இருந்த பார்த்திபன் தமிழ் திரையுலகில் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.தற்போது…

11 hours ago

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது.. “போலி போட்டோஷூட் அப்பா”வுக்கு பட்டியல் போட்ட இபிஎஸ்!

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். இது குறித்து…

11 hours ago

இனி தமிழ் மொழியை சொல்லி திமுக வியாபாரம் செய்ய முடியாது : ஹெச் ராஜா தாக்கு!

திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், ராஜீவ்…

11 hours ago

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு…கோவிலில் சிறப்பு வழிபாடு.!

பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…

12 hours ago

This website uses cookies.