விழுப்புரத்தில் மகாலட்சுமி பிளாசாவில் இயங்கி வரும் கலர்ஸ் உள்ளிட்ட இரண்டு துணிக்கடையில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் புதுச்சேரி சாலையில் உள்ள எம்.எல்.எஸ் என்று அழைக்கப்படும் மகாலட்சுமி குழுமத்தின் உள்ள கிரின்ஸ் வணிக வளாகம், திரையரங்கு, மளிகை கடை, மகாலட்சுமி துணிக்கடை, மற்றும் கல்வி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் பத்துக்கு மேற்பட்டோர் சோதனை நடத்தி வருகின்றனர்.
காலை 11 மணி அளவில் தொடங்கிய சோதனை தற்பொழுது வரை நடைபெற்று வருகிறது. சோதனையில் முக்கிய ஆவணங்கள் ஏதாவது கைப்பற்றப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கிரீன்ஸ் வணிக வளாகம் நுழைவாயிலில் பூட்டப்பட்டுள்ளன முழுமையாக வணிக வளாகம் மூடப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது.
இதனால் அது வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று உள்ளனர். இதே போல விழுப்புரத்தில் மற்றொரு பிரபல ஜவுளிக்கடையான கன்னிகா பரமேஸ்வரி ஸ்டோர்ஸில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற…
This website uses cookies.