நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அமைச்சர்கள் பங்கேற்பார் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இது தொடர்பாக திமுகவின் அமைப்புச் செயலாளர் திமுக சார்பில் ஆளுநரின் தேர்நீரில் இருந்து யாரும் பங்கேற்க மாட்டார்கள். ஆனால், தமிழ்நாடு அரசு சார்பில் பங்கேற்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்று கூறியிருந்தார்.
அதேபோல், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பியும் ஆளுநர் நடுநிலையாக இருக்க வேண்டும். அவர் ஏதோ ஒரு கட்சிக்காரர் போல் நடந்து கொள்ளும் பொழுது எதிர்க்கட்சிகளும் இப்படித்தான் தேநீர் விருதை புறக்கணிப்பதாக அறிவிப்பார்கள் என்றார்.
இதேபோல், திமுக கூட்டணி கட்சிகள் அனைத்துமே ஆளுநரின் தேநீர் விருந்தில் புறக்கணிப்பதாக அறிவித்தனர். ஆனால், சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தில், பங்கேற்கும் என அறிவித்திருந்தது. இந்த நிலையில், சென்னை கோட்டையில் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் மு க ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.
இதன் பின்னர், பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பங்கேற்கும் ஆளுநர் என்ற பதவிக்கு மதிப்பளித்து தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள் தேநீர் விருதில் பங்கேற்பார் என தெரிவித்திருந்தார். அதாவது, திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் யாரும் தேநீர் விருந்தில் பங்கேற்க மாட்டார்கள். அதே நேரத்தில், தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் ஆளுநரின் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்கின்றனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.