இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே 5-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.அந்த வகையில் முதலில் டாஸ் வின் பண்ணி பேட்டிங்கை தேர்வு செய்தார் இந்திய கேப்டன் பும்ரா.
கடந்த பல போட்டிகளில் தொடர்ந்து மோசமான பேட்டிங்கை ஆடி வரும் ரோஹித் சர்மா,இந்த கடைசி போட்டியில் இருந்து விலகினார்.இதனால் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கே எல் ராகுல் களமிறங்கினார்கள்.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆஸ்திரேலியா அணியின் பவுலர்களை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர்.விராட் கோலி வழக்கம் போல ஆப் சைடு சென்ற பந்தை அடிக்க முயற்சி செய்து,தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதனால் இந்திய அணியின் மோசமான பேட்டிங் தொடர்ந்து கொண்டே இருக்கிறது, ஓரளவு தாக்கு பிடித்த ரிஷப் பந்த் மட்டும் அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார்.இதன் மூலம் இந்திய அணி 185 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையும் படியுங்க: மீண்டும் பும்ரா கேப்டன்…அப்போ ரோஹித்…இந்திய அணியில் தொடரும் குழப்பம்..!
அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழந்து 9 ரன்கள் எடுத்துள்ளது.இந்திய அணி இந்த போட்டியை கட்டாய வெற்றி பெற வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதால்,ஆட்டத்தின் விறுவிறுப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என கூறப்படுகிறது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.