தமிழகம்

கோப்பையை தூக்கி குப்பையில் வீசுங்கள்… முன்னாள் பாக்.,வீரர் சர்ச்சை பேச்சு.!

இந்தியாவின் சாம்பியன்ஸ் டிராபி வெற்றி சர்ச்சை

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் தன்வீர் அகமது,இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றதை சர்ச்சைக்குள்ளாக்கும் வகையில் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.

இதையும் படியுங்க: புற்றுநோயால் அவதிப்படும் பிரபல நடிகர்..விஜய்க்கு வைத்த முக்கிய கோரிக்கை.!

துபாய் மைதானம் வேண்டுமென்றே இந்தியாவுக்கு சாதகமாக தயாரிக்கப்பட்டதாகவும்,இதற்கு ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷா காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.மேலும்,இந்தியா தனது சாம்பியன்ஸ் டிராபியை குப்பைத் தொட்டியில் வீசவேண்டும் என்ற அதிர்ச்சிகரமான கருத்தையும் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 9ம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணி,நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து வரலாற்றுச் சாதனை படைத்தது.மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா,76 ரன்கள் விளாசி அணியை வெற்றிப் பாதையில் நடத்தினார்.

இந்த வெற்றிக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ள தன்வீர் அகமது,தனது யூடியூப் சேனலில்,இந்தியா துபாயில் நடந்த அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றதற்குக் காரணம் மைதானத்தின் தன்மை என்று தெரிவித்துள்ளார்.ஜெய் ஷாவின் பங்களிப்பு இல்லாமல் இது நடந்திருக்காது என்றும்,அவர் மைதான அமைப்பை இந்திய அணிக்கே ஏற்றவாறு மாற்றியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தியா தனது சாம்பியன்ஸ் டிராபி வெற்றியை குப்பைத் தொட்டியில் வீச வேண்டும் என்று கூறியதன் மூலம்,இந்திய ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளார்.

இந்திய ரசிகர்கள் தன்வீர் அகமது கருத்துகளை கடுமையாக எதிர்த்துள்ளனர். கிரிக்கெட் ஒரு திறந்தவெளி விளையாட்டு என்பதால்,வெற்றி அல்லது தோல்வி மைதானம் மட்டுமே தீர்மானிக்காது எனவும்,இது பாகிஸ்தான் அணியின் புறக்கணிப்பை மறைக்க வெளிப்படும் பொறாமை என்ற வகையிலான கருத்துக்களும் வலம் வருகின்றன.

Mariselvan

Recent Posts

‘அந்த’ வீடியோக்களை வெளியிட்ட நடிகர்.. நல்லா இருந்த மனுஷனுக்கு என்னாச்சு? ஷாக் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…

13 minutes ago

பிரபல கிரிக்கெட் வீரரின் பயோபிக்கை இயக்கும் பா.ரஞ்சித்? ஆச்சரிய தகவல்

புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…

36 minutes ago

டிராலி சூட்கேஸில் காதலி… பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் அழைத்து சென்ற காதலனின் விநோத முயற்சி : டுவிஸ்ட்!

தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…

1 hour ago

சூர்யா பட ஆடியோ வெளியீட்டில் கலந்துகொள்ளும் ரஜினிகாந்த்? மாஸ் ஆ இருக்கப்போகுது!

கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் சூர்யாவை வைத்து இயக்கியுள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…

1 hour ago

செய்தியாளர்கள் கேட்ட கேள்வி… காரில் ஏறி புறப்பட்ட முன்னாள் அமைச்சர்!

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளாங்குடி பகுதியில் ரூபாய் 18 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய கட்டுமான பணிகளுக்கான பூமி…

2 hours ago

இளம்பெண்ணுக்கு வீட்டுக்காவல்.. அடைத்து வைத்து சித்ரவதை: 100க்கு பறந்த போன் கால்!

கோவை டவுன்ஹால் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் என்பவரது மகள் 23 வயதான சூர்யா இவர் வேலை செய்து வரும் நிறுவனத்தில்…

3 hours ago

This website uses cookies.