தமிழகம்

இந்திய அணி செஞ்சது சரியா…ICC ரூல் என்ன சொல்லுது…ஆதங்கத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து கேப்டன்..!

12 வீரர்களை ஆட வைத்த இந்திய அணி

இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கிடையே 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் இந்திய அணி 3-1என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் நேற்று புனேவில் நடந்த 4 வது டி-20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் மட்டுமே தொடரை வெற்றி பெற வாய்ப்பு இருந்த நிலையில்,நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

முன்னதாக இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடி 181 ரன்களை குவித்தது.சிவம் துபே மற்றும் பாண்டியா அதிரடியாக ஆடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர்.ஆட்டத்தின் கடைசி ஓவரின் போது சிவம் துபேவின் தலைக்கவசத்தில் பந்து பலமாக பட்டது.இதனால் அவருக்கு தலையில் லேசான வலி ஏற்பட்ட காரணத்தினால் அவருக்கு பதிலாக மாற்று வீரராக ஹர்ஷித் ராணா ஆட்டத்தில் இறங்கினார்.

இதையும் படியுங்க: என் கூட உல்லாசமா இருக்கணும்.. இல்லைனா கொன்னுடுவேன் : பணிப்பெண்ணை மிரட்டிய திமுக பிரமுகர்!

ஹர்ஷித் ராணா அற்புதமாக பவுலிங் செய்து இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.இதனால் கடும் கோவத்தில் இங்கிலாந்து அணி மற்றும் ரசிகர்கள் இருந்தனர்.சிவம் துபே ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டர் என்பதால் அவருக்கு பதிலாக வேறொரு ஆள் ரௌண்டரை ஆட வைக்க வேண்டும்,அணியில் ரமந்தீப் ஆல்ரவுண்டர் இருக்கும் போது எப்படி ஹர்ஷித் ராணாவை அனுமதிக்கலாம்,அவர் ஒரு வேகப்பந்து வீச்சாளர்,விதிப்படி ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டால் அவர் பேட்டர் என்றால் பேட்டிங் ஆடும் ஒரு வீரரும்,பந்துவீச்சாளர் என்றால் பந்துவீச்சாளரை அனுமதிக்க வேண்டும் இதுதான் விதி,இதனால் கடும் அதிருப்தி ஆன இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியது,இணையான மாற்று வீரரை இந்திய அணி தேர்வு செய்யவில்லை,ஒன்று சிவம் துபே 25 மைல் வேகத்தில் போடும் பந்துவீச்சாளராக இருக்க வேண்டும் அல்லது ராணா ஒரு சிறப்பான பேட்டராக இருக்க வேண்டும் அப்போது தான் இந்திய அணி எடுத்த முடிவு சரியான முடிவாக கருதப்படும்,மேலும் இந்த முடிவு குறித்து என்னிடம் எந்த ஒரு ஆலோசனையும் செய்யப்படவில்லை.பின்பு நான் நடுவரிடம் இதைப்பற்றி ஆட்டத்தின் போது கேட்ட போது,அவர் போட்டி நடுவர் இதற்கு சம்மதம் தெரிவித்ததாக கூறினார்.மேலும் இந்திய அணி 12 வீரர்களை ஆட வைத்து வெற்றி பெற்றதாக தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

மேலும் பல முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் இந்திய அணியின் இந்த செயலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்,இந்திய ரசிகர்கள் பலரும் இந்திய அணி இவ்வாறு செய்தது தவறு என தங்களுடைய கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்.

Mariselvan

Recent Posts

பூகம்பமாய் வெடித்த ‘எம்புரான்’ சர்ச்சை..மன்னிப்பு கேட்ட மோகன்லால்..!

மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…

2 hours ago

சூர்யா வீட்டில் திடீர் விசேஷம்…படையெடுத்த பிரபலங்கள்..குஷியில் ஜோதிகா.!

பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…

3 hours ago

தோனி சிக்ஸர் ரொம்ப முக்கியமா..கோட்டை விடும் CSK..முன்னாள் வீரர் காட்டம்.!

CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…

4 hours ago

இது தானா..எதிர்பார்த்த நாளும் இதுதானா..நடிகை திரிஷா போட்டோ வைரல்..ரசிகர்கள் வாழ்த்து.!

த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…

5 hours ago

AK ‘God Bless U’ மாமே..அட்டகாசமாக வெளிவந்த Second லிரிக் வீடியோ.!

அனிருத் பாடிய 'God Bless U’ நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்திலிருந்து இரண்டாவது பாடலாக…

6 hours ago

IPL பிளே ஆஃப் 4 டீம் ரெடி..முன்னாள் வீரர் சொன்ன ரகசியம்.!

இர்பான் பதான் கணிப்பு! கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி…

7 hours ago

This website uses cookies.