சிட்னியில் நடந்த இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஜாம்பவான் பவுலர் பும்ரா முதுகு வலி பிரச்சனை காரணமாக இரண்டாவது இன்னிங்ஷில் பவுலிங் போடவில்லை.
இதனால் இந்திய அணியின் மற்ற பவுலர்களான சிராஜ் மற்றும் பிரஷித் கிருஷ்ணா சிறப்பான பௌலிங் போட்டால் மட்டுமே இந்திய அணி வெற்றிபெற முடியும் என்ற சூழ்நிலையில் இருந்தது.
வெறும் 162 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்த இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி ஆஸ்திரேலியா அணியை வீழ்த்த போகிறார்கள் என்ற பயம் ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில்,ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான முதல் இரண்டு ஓவர்களை இந்திய அணி வீசியது.
முதல் ஓவரை வீசிய சிராஜ் 13 ரன்களை விட்டுக்கொடுத்தார்,அதன்பின்பு இரண்டாவது ஓவரை வீச வந்த பிரஷித் கிருஷ்ணாவும் 13 ரன்களை வாரி கொடுத்தார்.இதனால் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி முதல் இரண்டு ஓவர்களில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான ரன்களை விட்டுக்கொடுத்து மோசமான சாதனையை படைத்தது.
இதையும் படியுங்க: WTC-யோட கடைசி வாய்ப்பும் பறிபோனது…5-வது டெஸ்டில் மண்ணை கவ்விய இந்திய அணி…!
மூன்றாவது ஓவரில் ஆஸ்திரேலியா அணி 9 ரன்களை எடுத்து,அந்த அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் மூன்று ஓவர்களில் அதிகமான ரன்களை எடுத்து சாதனை படைத்தது.இதனால் இந்திய அணியின் வெற்றி நம்பிக்கை முதல் இரண்டு ஓவர்களில் கைவிட்டு சென்று,ஆஸ்திரேலியா அணிக்கு சாதகமாக அமைந்தது.
ஒருவேளை பும்ரா ஆடி இருந்தால் இந்திய அணி வெற்றி அடைந்திருக்கும் என ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த தொடரில் ஆட்ட நாயகன் விருதை தனி ஆளாக போராடி ஆஸ்திரேலியா வீரர்களுக்கு பயத்தை காட்டிய பும்ரா வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.