மதுரையில் பிறப்புறுப்பில் 2 கிலோக்கும் அதிகமான எடையுடன் சுற்றித் திரிந்த நபரை ரெட் கிராஸ் அமைப்பினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மதுரை: மிகுந்த போக்குவரத்து நெரிசல் உடன் எப்போதும் பரபரப்பாக காணப்படும் மதுரை, ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தின் சாலையில் பிறப்புறுப்பில் இரண்டு கிலோ கட்டியுடன் நடக்க முடியாமல் சுமார் 45 வயது மதிக்கதக்க நபர் சாலையில் மயங்கி விழுந்து கிடந்துள்ளார்.
பின்னர், இது குறித்த தகவல் இந்தியன் ரெட் கிராஸ் அமைப்பினருக்கு கிடைத்துள்ளது. இதன் பேரில், அதன் செயலாளர் ராஜ்குமார் மற்றும் உறுப்பினர் அறிவழகன் ஆகியோர் நேரில் சென்று, மயங்கி விழுந்த கிடந்த அந்த நபருக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர், அந்த நபர் குறித்து விசாரித்துள்ளனர்.
இந்த விசாரணையில், அவர் காரைக்குடியைச் சேர்ந்த சரவணன் என்பதும், தனது குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. அது மட்டுமல்லாமல், பிறப்புறுப்பில் ஏற்பட்ட இரண்டு கிலோவுக்கும் அதிகமான எடையுடன் கூடிய கட்டியுடன் நடக்க முடியாமல் ஒவ்வொரு ஊராக அவர் சுற்றித் திரிவதும் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: திமுக அரசுக்கு எதிராக ஒரு வரி கூட இல்லை.. சென்னை மழை குறித்து அண்ணாமலை கருத்து!!
மேலும், நோயின் தீவிரம் அதிகரித்ததால் தற்போது நடக்க இயலாமல் மயங்கி கீழே விழுந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். பின்னர், ரெட் கிராஸ் அமைப்பைச் சேர்ந்த இருவரும், உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு, போலீசார் உதவியுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள ஆதரவற்றோர் சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளனர்.
தற்போது அவருக்கு அங்கி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, தகவல் கிடைத்ததும் வந்து உதவிய ரெட் கிராஸ் அமைப்பினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…
சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
This website uses cookies.