பழனி அருகே புறவழிச் சாலையில் தொப்புள் கொடி அகற்றப்படாத நிலையில் கிடந்த குழந்தையின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி அடுத்த சண்முக நதி புறவழிச் சாலையில் தொப்புள் கொடி கூட அகற்றப்படாத இறந்த குழந்தையின் உடல் கிடந்துள்ளது. அந்த வழியாக விவசாய பணிகளுக்காக சென்றவர்கள் குழந்தையின் சடலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் அறிந்து சென்ற பழனி நகர காவல் நிலைய போலீசார் பார்த்தபோது வீட்டில் பிரசவமான குழந்தையை தொப்புள் கொடி அகற்றாத நிலையில், சடலமாக மர்ம நபர்கள் வீசி சென்றது தெரியவந்துள்ளது.
உடனடியாக குழந்தையின் சடலத்தை மீட்பு பழனி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தையை பெற்ற தாய் யார்? குழந்தை இறந்த நிலையில் பிறந்ததால் வீசி சென்றனரா ?அல்லது உயிருடன் வீசிச் சென்றனரா? என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பழனி புறவழிச் சாலையில் இறந்த நிலையில் கிடந்த குழந்தையின் உடலால் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.