திருச்சியில் குப்பையில் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தையை வீசிச் சென்றது யார் என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி இபி ரோடு அருகே உள்ள தேவதானம் ரயில்வே கேட் அருகில் இன்று மதியம் பூசாரி தெருவை சேர்ந்த அம்மு மற்றும் வளர்மதி ஆகிய இருபெண்கள் அப்பகுதியில் உள்ள குப்பை மற்றும் பழைய பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, அருகிலுள்ள முட்புதரில் இருந்து பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது.
மேலும் படிக்க: ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தோடு தீக்குளிக்க முயற்சி.. போலி பத்திரம் மூலம் வீட்டை அபகரித்துக் கொண்டதாக புகார்
இருவரும் சென்று பார்த்த போது, அங்கு பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று உயிருடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடம் வந்தனர். இபி ரோட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் அளித்து பிறந்த பச்சிளம் குழந்தையை உடனடியாக முதலுதவிக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து சைல்ட் லைன் பொறுப்பாளரிடம் பிரியாவிடம் பச்சிளம் குழந்தையை ஒப்படைத்தனர். மேலும் பச்சிளம் ஆண் குழந்தையை ஈவு இரக்கமின்றி குப்பைத் தொட்டியில் வீசி சென்றது யார் என்பது குறித்து திருச்சி கோட்டை காவல் நிலைய காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.