தமிழகம்

நீலகிரியில் தொடரும் டார்ச் லைட் சிகிச்சை.. என்ன சொல்கிறது அரசு?

நீலகிரி, மசினகுடி ஆரம்ப சுகாதார மையத்தில் டார்ச் லைட் வெளிச்சத்தில் விபத்தில் காயம் அடைந்தவருக்கு சிகிச்சை அளித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள மசினகுடி பகுதியில் நேற்று (நவ.25) இரவு இருசக்கர வாகன விபத்து ஒன்று நிகழ்ந்து உள்ளது. இந்த விபத்தில் இருவர் காயமடைந்து உள்ளனர். இதையடுத்து, அவர்களை சிகிச்சைக்காக அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சேர்த்துள்ளனர்.

அங்கு அவர்களுக்கு டார்ச் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், அது தொடர்பான காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இது குறித்து கூடலூர் வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் ஊடகம் ஒன்றிற்கு விளக்கம் அளித்துன் உள்ளார்.

அதில், “ஒரே நேரத்தில் 2 பேர் விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். ஒருவருக்கு வழக்கமாக சிகிச்சை அளிக்கும் அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. மற்றொருவருக்கும் உடனடியாக சிகிச்சை தேவைப்பட்டதால், அவரை செவிலியர்கள் தங்கும் அறையில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

அந்த அறையில் நேற்று மாலை Short circuit ஆகி மின்விளக்கு பழுதானது. எனவே, அவசரம் கருதி அவருக்கு டார்ச் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், செவிலியர் அறையில் ஏற்பட்ட பழுதை உடனடியாக சரி செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. அதேநேரம், வழக்கமாக சிகிச்சை அளிக்கப்படும் அறையில் மின்சாரத் துண்டிப்பு ஏற்படவில்லை” எனக் கூறி உள்ளார்.

முன்னதாக, நீலகிரி மாவட்டம், கோத்தகிரி இடுகொரையைச் சேர்ந்த 3 வயது சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிறுமியை பெற்றோர் அழைத்துச் சென்றனர். அப்போது, மின்தடை காரணமாக மருத்துவமனை இருளில் மூழ்கியதால், டார்ச் லைட் மற்றும் செல்போன் வெளிச்சத்தில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: அதிகாலையிலேயே ‘மனிதன்’ பட பாணியில் சம்பவம்.. சாலையோரத்தில் இருந்த 5 தமிழர்கள் உயிரிழப்பு!

இது தொடர்பாக மருத்துவர்கள் அப்போது கூறுகையில், மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக டார்ச் லைட் பயன்படுத்தப்பட்டதாகவும், ஆனால் சிறிது நேரத்தில் ஜெனரேட்டர் இயக்கப்பட்டாலும், இடைப்பட்ட நேரத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை பரப்பி உள்ளதாகக் கூறினர். இது தற்போது அதே மாவட்டத்தில் தொடர்கதையாவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…

ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…

6 hours ago

ஹாரர் படத்தில் சிவகார்த்திகேயனா? புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்…

பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…

8 hours ago

கோவைக்கு செங்கோட்டையன் திடீர் வருகை… சரமாரி கேள்வி எழுப்பிய நிருபர்கள் : மவுனம் கலையுமா?!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…

8 hours ago

தனது பெயரை மூன்றேழுத்தாக சுருக்கிக்கொண்ட கௌதம் கார்த்திக்? ஏன் இப்படி?

திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…

8 hours ago

தக் லைஃப் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடி? எப்போனு தெரிஞ்சிக்கனுமா?

மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…

9 hours ago

மருமகனுடன் மாமியார் ஓட்டம்… மகளுக்காக வைத்திருந்த நகை, பணத்துடன் மாயம்!

உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…

10 hours ago

This website uses cookies.