கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே இன்ஸ்டா காதலியான தையல் பயிற்சி மாணவியை திருமண ஆசை காட்டி கடத்தி சென்ற வாலிபரை குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள நங்கன்விளை கிராமத்தை சேர்ந்தவர் அபிஷேக் (19). இவர் எலக்ட்ரானிக்ஸ் டிப்ளமோ படித்து முடித்து விட்டு, ஒசூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மாணவி தற்போது கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வருவதோடு, நாகர்கோவிலில் உள்ள தையல் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்த நிலையில், இன்ஸ்டாவில் பழக்கமான இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 22ம் தேதி தையல் பயிற்சிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாததால், உறவினர்கள் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
இதனையடுத்து, போலீசார் விசாரணை நடத்தியதில் அபிஷேக் அந்த மாணவியை திருமண ஆசை காட்டி கடத்தி சென்று ஒசூரில் தனி வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, அங்கு சென்று மாணவியை மீட்ட குளச்சல் அனைத்து மகளிர் போலீசார், அபிஷேக்கை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்ததோடு, மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.