கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே இன்ஸ்டா காதலியான தையல் பயிற்சி மாணவியை திருமண ஆசை காட்டி கடத்தி சென்ற வாலிபரை குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள நங்கன்விளை கிராமத்தை சேர்ந்தவர் அபிஷேக் (19). இவர் எலக்ட்ரானிக்ஸ் டிப்ளமோ படித்து முடித்து விட்டு, ஒசூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மாணவி தற்போது கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வருவதோடு, நாகர்கோவிலில் உள்ள தையல் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்த நிலையில், இன்ஸ்டாவில் பழக்கமான இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 22ம் தேதி தையல் பயிற்சிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாததால், உறவினர்கள் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
இதனையடுத்து, போலீசார் விசாரணை நடத்தியதில் அபிஷேக் அந்த மாணவியை திருமண ஆசை காட்டி கடத்தி சென்று ஒசூரில் தனி வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, அங்கு சென்று மாணவியை மீட்ட குளச்சல் அனைத்து மகளிர் போலீசார், அபிஷேக்கை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்ததோடு, மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…
கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
This website uses cookies.