ரஜினியின் ஆஸ்தான வில்லன்…இந்த மாஸ் ஹீரோ கூட மட்டும் நடிக்காததற்கு இதுதான் காரணமா?: கடைசி படத்தில் நேர்ந்த கொடுமை…!!

ரஜினியின் ஆஸ்தான வில்லன்…இந்த மாஸ் ஹீரோ கூட மட்டும் நடிக்காததற்கு இதுதான் காரணமா?: கடைசி படத்தில் நேர்ந்த கொடுமை…!!

நடிகர்களில் சிலரால் மட்டுமே கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்து அந்த கதாபாத்திரமாகவே வாழ முடியும். அப்படி வாழ்ந்து ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய நடிகரை பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.

தமிழ் சினிமா வில்லன் என்றால், ஜிம் பாடியாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகவே இருந்தது. இதனை தகர்த்து, ஒல்லியாக இருப்பவர்களும் வில்லனாக நடிக்கலாம் எனவும் , வில்லனிசமான ஆட்டிட்யூட் இருந்தாலே போதும் என நிரூபித்தவர் ரகுவரன்.

ஒரு ஹீரோவுக்கான மாஸ் ஏறவேண்டும் என்றால், அந்த ஹீரோ எப்படிப்பட்ட வில்லனிடம் மோதுகிறார் என்பதைப் பொறுத்து தான் அமையும். அந்த வகையில் நடிகர் ரஜினியின் மாஸ் ஏறுவதற்கு மிக முக்கியமான காரணமாக இருந்தவர் ரகுவரன்.

ஊர்காவலன், மனிதன், சிவா, ராஜா சின்ன ரோஜா, பாட்ஷா, முத்து, அருணாச்சலம் என பல படங்களில் நடித்து ரஜினிக்கு ஆஸ்தான வில்லனாக மாறிவிட்டார் ரகுவரன். ஆனால், ரஜினிக்கு போட்டியாக கருதப்பட்ட கமல்ஹாசனும் ரகுவரனும் இணைந்து ஒரு படம்கூட நடிக்கவில்லை.

படம் குறித்த விமர்சனங்களில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என நன்றாக நடித்த நடிகர்களை பாராட்டுவார்கள். அவர்கள் கேமராவுக்கு முன்புதான் அந்த கதாபாத்திரமாக வாழ்ந்திருப்பார்கள். ஆனால், நடிகர் ரகுவரன் கேமராவுக்கு பின்பும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

அதற்கு உதாரணம் தான் அரண்மனை காவலன் படம். படத்தில் சர்வாதிகாரி கேரக்டராக ரகுவரன் நடித்திருப்பார். இதில் விஜயகுமாரை அரிவாளால் வெட்டுவது போல் ஒரு காட்சி. விஜயகுமாரும் ஸ்ரீவித்யாவும் ஆற்றில் பரிசலில் சென்று கொண்டிருக்கும் போது, தண்ணீருக்குள் இருந்து ரகுவரன் எழுந்து விஜயகுமாரை வெட்டுவதுதான் சீன்.

ரகுவரன் தண்ணீருக்குள் இருக்கும் போது அவர் அருகில் பரிசல் வரும் போது எழுந்து அரிவாளால் வெட்ட வேண்டும். ஆனால், 7 முறை டம்மி அரிவாள் மிஸ்ஸாகியிருக்கிறது. அப்போது இயக்குநரிடம் ரகுவரன், எனக்கு டம்மி அரிவாள் வேண்டாம். ஒரிஜினல் அரிவாள் கொடுங்க. அப்போதுதான் எனக்கு ரியலாக நடிக்க வரும் என்றிருக்கிறார்.

இதைக்கேட்ட விஜயகுமார் ஷாக்காகி, நீ ரியலா நடிக்கணும்னு என்னை ரியலா வெட்டிடாத ரகு என சொல்லிருக்கிறார். ரகுவரன் பிடிவாதமாக இருந்ததைப் பார்த்தபிறகுதான் விஷயம் சீரியஸ் என உணர்ந்திருக்கிறார்கள். யார் சொல்லியும் கேட்காத ரகுவரன், நடிகை ஸ்ரீவித்யா கொஞ்சம் கடிந்து பேசியப்பிறகுதான் டம்மி அரிவாளோடு நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார்.

வில்லனாக மிரட்டும் டப்பிங்கில்தான் அதிகம் மெனக்கெடுவார். ஒரு வார்த்தையை குறைந்தது 100 முறையாச்சும் வேற வேற பாணியில் பேசிப் பார்ப்பாராம். பாட்ஷா படத்தில் அவர் பேசிய ஆண்டனி… மார்க் ஆண்டணி என்பது இப்படிப்பட்ட ஒரு உழைப்பிற்கு பிறகு கிடைத்ததுதான்.

ரகுவரன் வில்லன் கதாபாத்திரங்களையும் தாண்டி முகவரி அண்ணன், ரன் மாமா, லவ் டுடே அப்பா என நல்ல, நல்ல கேரக்டர்களிலும் நடித்திருக்கிறார். ஆனால், ரகுவரனுக்கு நடிப்பைவிட இசையில்தான் ஆர்வம் அதிகம். ஒரு இசையமைப்பாளராக வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை.

கல்லூரியில் படிக்கும் போதே knock out என்கிற இசைக்குழு நடத்தி வந்திருக்கிறார். அதுபோக, நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர் பல பாடல்களையும் இசையமைத்து, பாடி அதை பதிவு செய்து வைத்திருக்கிறார். அதில் சில பாடல்களை ரகுவரனின் மரணத்திற்குப் பிறகு raghuvaran a musical journey என்கிற பெயரில் ஒரு ஆல்பமாக மாற்றி ரஜினியை வைத்து ரிலீஸ் செய்திருக்கிறார் ரோகிணி.

ரகுவரனுக்கு உடல்நிலை சரியில்லாத போது நடித்த படங்கள்தான் யாரடி நீ மோகினி, கந்தசாமி. இதில் யாரடி நீ மோகினி படத்தில் அவரது காட்சிகள் எல்லாம் நிறைவடைந்திருந்த நிலையில், கந்தசாமி படத்தில் மட்டும் சில நாட்கள் நடிக்க வேண்டி இருந்தது. அந்த சமயத்தில்தான் திடீரென ரகுவரன் தூக்கத்திலேயே காலமானார். அதன் பிறகுதான் கந்தசாமி படத்தில் ரகுவரனுக்கு பதில் ஆஷிஷ் வித்யார்த்தியை நடிக்க வைத்திருக்கிறார்கள்.

மறைந்தாலும் ரசிகர் மனதில் வில்லனு சொன்னாலே ஞாபகத்திற்கு வரும் நடிகர் முதல் 3 இடங்களில் இருப்பார் ரகுவரன்.

UpdateNews360 Rajesh

Recent Posts

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

8 hours ago

எங்க கூட்டணிக்கு வந்தால் விஜய் வெற்றி பெற முடியும்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் கணிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…

9 hours ago

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள் : ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு!

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…

9 hours ago

போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க வந்த பெண் மானபங்கம்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…

9 hours ago

திடீரென ரஜினி கொடுத்த பரிசு.. ஆச்சரியத்தில் ஆடிப்போன இயக்குநர்..!!

இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…

10 hours ago

அடுத்தடுத்து மாயமான இளைஞர்கள் கொன்று புதைப்பு.. வெளியான பகீர் தகவல்!

கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…

10 hours ago

This website uses cookies.