Categories: தமிழகம்

விரைவில் விண்வெளிக்கு பறக்கும் மனிதன்: முன்னாள் இஸ்ரோ தலைவர் வெளியிட்ட சூப்பர் தகவல்..!!

கன்னியாகுமரி: தொலைதொடர்பு சேவையில்  தனியாரின்  போட்டியிருந்தால்தான் கிராமங்களில் குறைந்த செலவில் தொலைதொடர்பு சேவை வழங்கமுடியும் என முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி அளித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அருகே அன்னை வேளாங்கண்ணி  பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் இந்திய விண்ணெளி ஆராய்ச்சி மைய முன்னாள் தலைவரும் விண்வெளி ஆராய்ச்சிமைய விஞ்ஞானியுமான  சிவன் கலந்து கொண்டார்.

தொடர்ந்து மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் விஞ்ஞானி சிவன் கூறுகையில் தமிழகம் உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருத்தும் தொழில்நுட்பம்,விவசாயம் சார்ந்தவற்றில்  கண்டுபிடிப்புகள் நிகழ்த்திவரும் மாணவர்களில்  மாநிலத்திற்கு தலா 3 மாணவர்கள் என மொத்தம் 108 இளம் விஞ்ஞானிகள் இஸ்ரோ மூலம்  தேர்ந்தெடுக்கபடுவார்கள் என தெரிவித்தார்.

மேலும், காலநிலை மாற்றத்தை கண்காணிக்க அமெரிக்காவின் நாசாவுடன் இஸ்ரோவும் இணைந்து நவீன செயற்கைகோள் அனுப்பும் முயற்சியில் உள்ளதாகவும் தெரிவித்த அவர் சூரியனை மிக நெருக்கமான தூரத்தில் இருந்து கவனித்து, அதன் வளிமண்டலம் மற்றும் காந்தப்புலம் பற்றிய தகவல்களைப் பெற முயற்சிக்கும் ஆதித்யா எல்1 என்று பெயரிடப்பட்ட திட்டம் மற்றும் சந்திரனை நோக்கி மீண்டும் ஒரு விண்வெளி பயணம்  திட்டம் இந்தியர்கள் விண்வெளி பயணம் (உள்நாட்டு கட்டமைப்பால்) போன்ற திட்டங்களின் ஆய்வு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும் வெகு விரைவில் நிறைவடையும் என தெரிவித்துள்ளார்.

தனியார் நிறுவனங்களுடன் போட்டி போடவும் ஏலத்திற்கும் பிஎஸ்என்எல் முன் வரலாம் என்றும் அதே வேளையில் தகவல் தொடர்பு துறையில் தனியார் பங்களிப்பும் போட்டியும் இருந்தால்தான் சேவைகளை குறைந்த செலவில் கிராமங்களுக்கும் கொண்டு சேர்க்க முடியும் .

4-ஜி 5-ஜி  சேவைகளுக்கான தொழில்நுட்பத்தை பொறுத்தவரை இந்தியா முழுக்க முழுக்க சொந்த தொழில்நுட்பத்தில் தன்னிறைவாக உள்ளது என்றும் கூறினார்

மேலும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தமிழகம் மட்டுமில்லாமல் வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு மத்திய பகுதி என இஸ்ரோ சார்பில் புதிய 6-பகுதிகளில் புதிய ஆராட்சி மையங்கள் தொடங்க திட்டம் இருப்பதாகவும் கூறினார்

UpdateNews360 Rajesh

Recent Posts

நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…

ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…

13 hours ago

ஹாரர் படத்தில் சிவகார்த்திகேயனா? புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்…

பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…

14 hours ago

கோவைக்கு செங்கோட்டையன் திடீர் வருகை… சரமாரி கேள்வி எழுப்பிய நிருபர்கள் : மவுனம் கலையுமா?!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…

15 hours ago

தனது பெயரை மூன்றேழுத்தாக சுருக்கிக்கொண்ட கௌதம் கார்த்திக்? ஏன் இப்படி?

திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…

15 hours ago

தக் லைஃப் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடி? எப்போனு தெரிஞ்சிக்கனுமா?

மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…

15 hours ago

மருமகனுடன் மாமியார் ஓட்டம்… மகளுக்காக வைத்திருந்த நகை, பணத்துடன் மாயம்!

உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…

17 hours ago

This website uses cookies.