Categories: தமிழகம்

மின் வாரிய ஊழியர்களை பணி செய்ய விடாமல் மிரட்டல் : தடுக்க வந்தவர்களை ஆபாசமாக திட்டிய திமுக நகராட்சி துணை தலைவரின் கணவர்!!

திருப்பூர் : காங்கேயம் திமுக நகராட்சி துணைத் தலைவரின் கணவர் மதுபோதையில் ரகளை செய்ததால் மின் கம்பம் நட வந்த மின்வாரிய  ஊழியர்கள் தற்காலிகமாக மின் கம்பத்தை நட்டுவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கேயம் நகராட்சியில் 16-வது வார்டு கவுன்சிலராக உள்ளவர் திமுகவைச் சேர்ந்த கமலவேணி. இவர் காங்கேயம் நகராட்சியில் துணைத் தலைவராகவும் உள்ளார்.

இவரது கணவர் ரத்தினகுமார் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். மேலும் தனது மனைவியின் அரசியல் பணிகளையும் கவனித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தாராபுரம் ரோட்டில் உள்ள மோர்க்காரர் வீதியில் மின்கம்பம் ஒன்று நட வேண்டி உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்த நிலையில் நேற்று மின் கம்பம் நட மின்வாரிய ஊழியர்கள் வந்து உள்ளனர். துணைத் தலைவரின் கணவர் ரத்தினகுமார் அங்கு வந்து அந்த இடத்தில் மின்கம்பம் நடக் கூடாது என குடிபோதையில் தகராறு செய்துள்ளார்.

மேலும் அங்குள்ள பொதுமக்களிடம் கெட்ட வார்த்தையில் மிரட்டும் தொனியில்  பேசியுள்ளார். இது அங்கிருந்த பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மின்கம்பம் நட வந்த ஊழியர்கள் காங்கேயம் நகராட்சிதுணை தலைவரின் கணவர் மிரட்டும் செயலளால் மின்கம்பத்தை முறையாக கான்கிரீட் போட்டு மின்கம்பத்தை நாடாமல் 4 அடி குளிபாறைத்து மண் மற்றும் ஜல்லி கற்களை கொண்டு ஒப்புக்கு பணியை முடித்து விட்டு சென்றனர்.

இதனால் 2 ஆண்டுகளுக்கு பிறகு நட்ட மின் கம்பம் மீண்டும் கீழே விழுவதற்கு வாய்ப்புள்ளது என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இன்று வரை அந்த கம்பத்தில் இருந்து மின் இணைப்பு கொடுக்கவே இல்லை என்கின்றனர்.

ஏற்கனவே திமுகவின் பெண் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின்  கணவர்கள் அரசியல்  பணிகளில்  செயல்படுவது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் குடிபோதையில் ரகளை செய்த காங்கேயம் நகராட்சித் துணைத் தலைவரின் கணவர் செயலால் திமுகவினருக்கு மேலும் கெட்டபெயர் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

திமுக கட்சியினர் இதுபோன்ற செயல்களை செய்யாமல் இருக்க கட்சி தலைமை மேலும்  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

AK 64- திரும்பவும் ஆதிக் ரவிச்சந்திரனோடயா? குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற Hint!

ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…

5 minutes ago

உச்சக்கட்ட சந்தோஷத்தில் அஜித்… திக்குமுக்காடிய ஆதிக் : GBU கொடுத்த சர்ப்ரைஸ்!

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அத்தனை அம்சங்களும் படத்தில் உள்ளதால் ரசிகர்கள்…

15 minutes ago

என்னைய தவிர எல்லாத்துக்கும் நேஷனல் அவார்டு- வெற்றிமாறனுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய நடிகை…

தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…

1 hour ago

என் மேல நம்பிக்கை வச்சதுக்கு மிக்க நன்றி அஜித் சார்- அர்ஜுன் தாஸ் உருக்கம்

வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…

2 hours ago

‘இனி நம்மல யாருமே பிரிக்க முடியாது’.. தண்டவாளத்தில் கட்டி அணைத்தவாறு தற்கொலை செய்த காதல் தம்பதி!

வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…

2 hours ago

ராமதாஸ் முடிவுக்கு எதிராக போர்க்கொடி.. அன்புமணிக்கு ஆதரவாக எழுந்த முதல் குரல்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…

3 hours ago

This website uses cookies.