மதுபோதையில் நண்பனை கொடூரமாக கொலை செய்த சக நண்பர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாலிபர் ஒருவர் தலையில் படுகாயங்களுடன் பிணமாக கிடப்பதாக பெரியநாயக்கன் பாளையம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
அப்பொழுது தலையில் கற்கள் மற்றும் மது பாட்டிலால் தாக்கியதில் வாலிபர் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதை அடுத்து வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
அதில் கொலையானவர் கோவை, சித்தாபுதூர் வெங்கடசாமி ரோட்டை சேர்ந்த லோகநாதன் என்பவரின் மகன் கண்ணன் என்பது தெரியவந்தது.
இவர் வேலைக்குச் செல்லாமல் இருந்து உள்ளார். இந்நிலையில் இரவு கண்ணன் சித்தாப்புதூரை சேர்ந்த தனது நண்பர்களான கார்த்திக், ரவீந்திரன், சதீஷ் உட்பட ஐந்து பேருடன் சேர்ந்து சித்தாப்புதூரில் உள்ள ஒரு பாரின் மது அருந்தி உள்ளனர்.
பின்னர் நண்பர்களுடன் வாடகை காரில் பெரியநாயக்கன் பாளையம் வளமீட்பு பூங்கா பகுதி அருகே வந்து உள்ளார். அங்கு வைத்து அவர்கள் மீண்டும் மது அருந்தியதாக தெரிகிறது.
போதை தலைக்கேறியதும் கண்ணன் மற்றும் நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த நண்பர்கள் கண்ணனை கருங்கல் மற்றும் பீர் பாட்டிலால் தலையில் பலமாக தாக்கி உள்ளனர். மேலும் பீர் பாட்டிலால் வயிற்றிலும் குத்தி உள்ளனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே கண்ணன் இறந்து போனார். இதை அடுத்து அங்கு இருந்து அவரது நண்பர்கள் தப்பியோடி தலைமறை ஆகிவிட்டனர்.
இந்த கொலை தொடர்பாக பெரியநாயக்கன் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணன் நண்பர்களான கார்த்திக், ரவீந்திரன், சதீஷ் உள்பட 5 பேரை தேடி வருகின்றனர்.
கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…
பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…
பட்டையை கிளப்பும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி…
சீர்காழி குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர்…
குட் பேட் அக்லி என்ன கதை அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின்…
கங்குவா படத்தை போல் மாற்றி விடாதீர்கள்.! தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஈரம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள்…
This website uses cookies.