Categories: தமிழகம்

போதையில் பெண்கள் ரகளை… போதை ஆசாமிகளிடம் கைவரிசை.. சுதாரித்தால் தர்ம அடி : திகைத்த திருப்பூர்!

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் கோவை, பொள்ளாச்சி உடுமலை உள்ளிட்ட பல்வேறு வெளியூர்களுக்கு மாநகர பேருந்துகளும், திருப்பூர் நகரப் பகுதிகளுக்கு செல்வதற்கு நகர பேருந்துகளும், மினி பேருந்துகளும் இங்கிருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த பேருந்து நிலையத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர் இந்த நிலையில் இன்று கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் திறக்கப்பட்டதால்வெளியூர் சென்றிருந்த ஏராளமான பெற்றோர் குடும்பத்துடன் பேருந்தில் பயணித்து திருப்பூர் வந்திருந்தனர்.

இந்த நிலையில்பேருந்து நிலையத்தின் முன்புற பகுதியில் திடீரென மது போதையில் இருந்த போதை ஆசாமியை சரமாரியாக இரண்டு பெண்கள் அடித்து தகாத வார்த்தைகளால் திட்டியும் தாக்குதலில் ஈடுபட்டனர்,

இந்த நபர் அங்கிருந்த பாலியல் தொழிலில் ஈடுபடும் இந்த இரண்டு பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்தனர். அவரிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் இருந்த இரண்டு பெண்கள் போதை ஆசாமி சுதாரிக்கவே அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறி இந்த இரண்டு பெண்கள் கோபமடைந்து மது போதையில் இருந்த நபரை அடித்தனர்,தாக்குதலுக்கு உள்ளான நபர் மது போதையில் இருந்ததால் அவரால் எழுந்து நடக்க முடியாத நிலையில் இரண்டு பெண்களும் மாறி மாறி அவரை சரமாரியாக தாக்கினர்.

இதனை பயணி ஒருவர் வீடியோ பதிவு செய்தார் அவரையும் அந்த பெண்கள் மிரட்டினார் இதனை அருகில் இருந்த பேருந்து ஓட்டுநர்கள் பயணிகள் யாரும் இந்த இரண்டு பெண்களை தடுக்கவில்லை.

இந்த தாக்குதல் சம்பவம் நடைபெறும் இடத்திற்கு 100 மீட்டர் தூரத்தில் தான் பேருந்து நிலையத்தின் உட்புறத்தில் உள்ள புறக்காவல் நிலையம் செயல்படுகிறது.

திடீரென பேருந்து நிலையத்திற்குள் வைதிகள் கூட்டம் கூடி தாக்குதல் சம்பவம் நடைபெறுவதை அறிந்தவுடன் அங்கு வந்த போலீசார் மது போதையில் இருந்த நபரை அங்கிருந்து மீட்டும்,போதை ஆசமியையும் சரமாரியா தாக்கிய இரண்டு பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களையும்போலீசார் விசாரணைக்காக தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் இரண்டு பெண்கள் சேர்ந்து மது போதையில் இருந்த போதை ஆசாமியை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் ஏராளமான போதை ஆசாமிகள் கெஸ்ட் ஹவுஸ் போல பயன்படுத்தி வருகின்றனர் தினமும் காவல்துறையினர் மாநகராட்சி ஊழியர்கள் இவர்களை கண்காணித்து அப்புறப்படுத்த வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கமல் ஆணவப் பேச்சு…தக் லைப் கொடுத்த செல்வராகவன்..!

வைரலாகும் செல்வராகவனின் இன்ஸ்டா வீடியோ நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த அமரன் திரைப்படம் பயங்கர ஹிட் அடித்து வசூல்…

3 hours ago

குட்டி ‘சைந்தவி’ என் கூடவே இருக்காங்க…பாச மழை பொழிந்த ஜி.வி.பிரகாஷ்.!

சைந்தவிக்கு எப்போதும் நல்ல மனசுங்க இசையமைப்பாளராகவும் நடிகராகவும் ஜொலித்து கொண்டிருப்பவர் ஜி வி பிரகாஷ்,இவருடைய நடிப்பில் வெளியாக இருக்கும் 'கிங்ஸ்டன்'…

4 hours ago

நண்பர்களால் உயிரை விட்ட என் அப்பா..பிரபல நடிகரின் மகன் உருக்கம்.!

நடிகர் பாண்டியன் இறப்பின் கொடூர பின்னணி தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த நடிகர் பாண்டியன்,இவர்…

5 hours ago

பிரபல இயக்குநர் வீட்டில் புகுந்த அமலாக்கத்துறை : சொத்துகள் முடக்க.. சென்னையில் பரபரப்பு!

சென்னையில் பிரபல சினிமா பட இயக்குநருக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை அதகாரிகள் அதிரடியாக முடக்கியுள்ளனர். ஜென்டில்மேன் படம் மூலம் தமிழ்…

5 hours ago

புது அவதாரத்தில் ‘டைட்டானிக்’ பட ஹீரோயின்…செம அப்டேட்டா இருக்கே.!

இயக்குனராகும் டைட்டானிக் பட ஹீரோயின் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தயாரித்து இயக்கிய திரைப்படம் டைட்டானிக். ஒரு கப்பலில்…

6 hours ago

நான் செத்தா விஜய் சேதுபதி தான் இறுதிச் சடங்கு செய்யணும் : பிரபல நடிகை விருப்பம்!

நான் செத்தா விஜய் சேதுபதி தான் இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என பிரபல நடிகை விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில்…

7 hours ago

This website uses cookies.