Categories: தமிழகம்

போதையில் பெண்கள் ரகளை… போதை ஆசாமிகளிடம் கைவரிசை.. சுதாரித்தால் தர்ம அடி : திகைத்த திருப்பூர்!

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் கோவை, பொள்ளாச்சி உடுமலை உள்ளிட்ட பல்வேறு வெளியூர்களுக்கு மாநகர பேருந்துகளும், திருப்பூர் நகரப் பகுதிகளுக்கு செல்வதற்கு நகர பேருந்துகளும், மினி பேருந்துகளும் இங்கிருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த பேருந்து நிலையத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர் இந்த நிலையில் இன்று கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் திறக்கப்பட்டதால்வெளியூர் சென்றிருந்த ஏராளமான பெற்றோர் குடும்பத்துடன் பேருந்தில் பயணித்து திருப்பூர் வந்திருந்தனர்.

இந்த நிலையில்பேருந்து நிலையத்தின் முன்புற பகுதியில் திடீரென மது போதையில் இருந்த போதை ஆசாமியை சரமாரியாக இரண்டு பெண்கள் அடித்து தகாத வார்த்தைகளால் திட்டியும் தாக்குதலில் ஈடுபட்டனர்,

இந்த நபர் அங்கிருந்த பாலியல் தொழிலில் ஈடுபடும் இந்த இரண்டு பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்தனர். அவரிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் இருந்த இரண்டு பெண்கள் போதை ஆசாமி சுதாரிக்கவே அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறி இந்த இரண்டு பெண்கள் கோபமடைந்து மது போதையில் இருந்த நபரை அடித்தனர்,தாக்குதலுக்கு உள்ளான நபர் மது போதையில் இருந்ததால் அவரால் எழுந்து நடக்க முடியாத நிலையில் இரண்டு பெண்களும் மாறி மாறி அவரை சரமாரியாக தாக்கினர்.

இதனை பயணி ஒருவர் வீடியோ பதிவு செய்தார் அவரையும் அந்த பெண்கள் மிரட்டினார் இதனை அருகில் இருந்த பேருந்து ஓட்டுநர்கள் பயணிகள் யாரும் இந்த இரண்டு பெண்களை தடுக்கவில்லை.

இந்த தாக்குதல் சம்பவம் நடைபெறும் இடத்திற்கு 100 மீட்டர் தூரத்தில் தான் பேருந்து நிலையத்தின் உட்புறத்தில் உள்ள புறக்காவல் நிலையம் செயல்படுகிறது.

திடீரென பேருந்து நிலையத்திற்குள் வைதிகள் கூட்டம் கூடி தாக்குதல் சம்பவம் நடைபெறுவதை அறிந்தவுடன் அங்கு வந்த போலீசார் மது போதையில் இருந்த நபரை அங்கிருந்து மீட்டும்,போதை ஆசமியையும் சரமாரியா தாக்கிய இரண்டு பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களையும்போலீசார் விசாரணைக்காக தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் இரண்டு பெண்கள் சேர்ந்து மது போதையில் இருந்த போதை ஆசாமியை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் ஏராளமான போதை ஆசாமிகள் கெஸ்ட் ஹவுஸ் போல பயன்படுத்தி வருகின்றனர் தினமும் காவல்துறையினர் மாநகராட்சி ஊழியர்கள் இவர்களை கண்காணித்து அப்புறப்படுத்த வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தாயுடன் உல்லாசம்… மகனின் கொடூர செயல் : தமிழகத்தை உலுக்கிய ஷாக் சம்பவம்!

தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…

2 minutes ago

மீண்டும் அதிர்ச்சி.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் ஆபாச வீடியோ லீக் : சிக்கிய ஆதாரம்?!

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…

40 minutes ago

பூகம்பமாய் வெடித்த ‘எம்புரான்’ சர்ச்சை..மன்னிப்பு கேட்ட மோகன்லால்..!

மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…

14 hours ago

சூர்யா வீட்டில் திடீர் விசேஷம்…படையெடுத்த பிரபலங்கள்..குஷியில் ஜோதிகா.!

பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…

14 hours ago

தோனி சிக்ஸர் ரொம்ப முக்கியமா..கோட்டை விடும் CSK..முன்னாள் வீரர் காட்டம்.!

CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…

15 hours ago

இது தானா..எதிர்பார்த்த நாளும் இதுதானா..நடிகை திரிஷா போட்டோ வைரல்..ரசிகர்கள் வாழ்த்து.!

த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…

16 hours ago

This website uses cookies.