தமிழகம்

புஸ்ஸி ஆனந்த் இப்படியாச் சொன்னார்? வெள்ளி வேல் எங்கே? .. ராமநாதபுரம் தவெகவில் வெடித்தது உட்கட்சி பூசல்!

ராமநாதபுரம் தவெக மாவட்டத் தலைவர், அமைப்பாளர் இடையே ஏற்பட்ட உட்கட்சி பூசலால் தொண்டர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டத் தலைவராக மலர்விழி ஜெயபாலா இருந்து வருகிறார். அதேநேரம், மாவட்ட அமைப்பாளராக பிபி ராஜா செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் விலையில்லா விருந்தகம் என்ற பெயரில் அன்னதானத்திற்கு பிபி ராஜா ஏற்பாடு செய்திருக்கிறார்.

ஆனால், இந்த நிகழ்வு குறித்து தனக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும், தனக்கு முறையான அழைப்பிதழ் வழங்கவில்லை என்றும் மலர்விழி ஜெயபாலா குற்றம் சாட்டி உள்ளார். அது மட்டுமல்லாமல், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பிபி ராஜாவை நீக்கி, மலர்விழி ஜெயபாலா உத்தரவிட்டு உள்ளார்.

அதேபோல், மலர்விழி ஜெயபாலாவை நீக்கி பிபி ராஜா உத்தரவிட்டு ஒரு கடிதம் வெளியிட்டு உள்ளார். இதனால், ராமநாதபுரம் தவெகவில் உட்கட்சி பூசல் வெடித்து உள்ளது. இந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிபி ராஜா, “தவெக மாநாட்டுக்குத் தொண்டர்களை அழைத்துச் செல்வதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் எனது தலைமையிலான நபர்களேச் செய்தார்கள்.

னால், என் பெயரை அவர்கள் மறைத்துவிட்டனர். கட்சி சார்பாக நடந்த இணைப்பு விழாவுக்கு மூன்று வாகனங்களில் தொண்டர்களுடன் சென்றபோது, ஒரு கோஷ்டியினர் தங்களை தொண்டி பாதி வழியிலேயே மறித்துச் செல்ல விடாமல் தடுத்துவிட்டனர்.

அதன் பின்னர் கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தைச் சந்தித்து முறையிட்டோம். அதற்கு ஆனந்த், ‘மலர்விழி அணியை ஏற்றுக் கொண்டால் அவருடன் சேர்ந்து பயணி, அப்படி ஏற்கவில்லை என்றால், நிகழ்ச்சி பேனர்களில் என் படத்தைப் போடாமல் விஜய் படத்தை மட்டுமே போட்டு தனியாகச் செயல்படு’ என்று கூறினார்.

இதையும் படிங்க: இளம்பெண்ணை கவ்வி இழுத்துச் சென்ற சிறுத்தை… வேலூரில் நொடியில் நடந்த விபரீதம்!!

எங்களை நீக்கும் அதிகாரம் தலைமைக்குத்தான் உண்டு. மாவட்டத் தலைவருக்கு இல்லை. நாங்கள் செய்த நற்பணிகளை எல்லாம் தலைவரின் கணவர் செய்ததைப் போல தலைமையிடம் காட்டிக் கொண்டு நல்ல பெயர் எடுத்து வருகிறார். நாங்கள் விஜய்க்கு பரிசாக வெள்ளி வேல் கொடுத்தோம். அது அவரது கைக்குப் போகவே இல்லை” எனக் கூறினார்.

அதேநேரம், பிபி ராஜா மீது பல குற்றவழக்குகள் உள்ளதா மலர்விழி ஜெயபாலா கூறியுள்ள்ளார். முன்னதாக, கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம், விக்கிரவாண்டி, வி.சாலையில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற்றது.

Hariharasudhan R

Recent Posts

திருமணம் ஆகுறதுக்கு முன்னாடியே கர்ப்பம்; அப்பா யார்னு கேட்பாங்களே? விஜய் டிவி பிரியங்காவின் பகீர் பின்னணி

டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…

1 hour ago

பேக்கரி டீலிங்… நீட் தேர்வு குறித்து காரசாரம் : அமைச்சருக்கு அதிமுக கடும் எதிர்ப்பு!

நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…

1 hour ago

விபத்துக்கு கிடைத்த வெகுமதி- கார் ரேஸில் மீண்டும் தடம் பதித்த அஜித்குமார்! மாஸ் காட்டுறாரே!

அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து  கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…

2 hours ago

3 மகள்களுக்கு தாயான பிரியங்கா.. 2வது கணவர் வசி குறித்து பரபரப்பு தகவல்!

பிரியாங்காவுக்கு நடந்த 2வது திருமணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் திருமணம் செய்த வசி சாச்சி குறித்து பல…

3 hours ago

ஜெனிலியாவையே மறந்துட்டீங்களேப்பா- சச்சின் பட துணை நடிகைக்கு திடீரென குவிந்த ரசிகர்கள்

சச்சின் ரீரிலீஸ் விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து மாஸ் ஹிட் அடித்த “சச்சின்” திரைப்படம் கடந்த 18…

3 hours ago

Aunty கேரக்டருக்கு இது எவ்வளவோ மேல்… சிம்ரனை காயப்படுத்திய நடிகை இவரா?

90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…

3 hours ago

This website uses cookies.