Categories: தமிழகம்

மிக மிக மோசமான முறையில் விசாரணை.. பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கு.. நீதிபதி கருத்து!!

மிக மிக மோசமான முறையில் விசாரணை.. பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கு.. நீதிபதி கருத்து!!

தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எதிரான சொத்து குவிப்பு வழக்கில் மிக மோசமான முறையில் விசாரணை நடைபெற்று உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். மிக மோசமான முறையில் வேலூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துள்ளது

இதன் காரணமாகவே வேலூர் நீதிமன்ற வழக்கு தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளோம் என்றும் தாமாக எடுத்த வழக்கை தலைமை நீதிபதி முன் சமர்ப்பிக்க பதிவுத்துறைக்கு நீதிபதி ஆனந்த் ஆணையிட்டார்.

மேலும், இவ்வழக்கு தொடர்பாக செப்.7-ஆம் தேதிக்கு பதிலளிக்க லஞ்ச ஒழிப்புத்துறை, பொன்முடி, அவரது மனைவி ஆகியோருக்கு உத்தரவிட்டது.

வழக்கை தாமாக முன்வந்து எடுத்து ஏன் என்பது குறித்து 17 பக்க உத்தரவில் தெரிவித்துள்ளேன் எனவும் நீதிபதி கூறியுள்ளார். இதனிடையே, 1996-ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது, அமைச்சராக இருந்த பொன்முடி, வருமானானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி, அவர் மீதும் அவரது மனைவி மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், பின் வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதில் கடந்த ஜூன் 28-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இருவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தனர். ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் இதுவரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படவில்லை.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் சார்பாக நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர் பொன்முடி மீதான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில் வேலூர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, தானாக முன்வந்து வழக்கு பதிந்து, அதை விசாரணைக்கு எடுத்துள்ளார். தற்போது, இவ்வழக்கு விசாரணையில் சொத்து குவிப்பு வழக்கில் மிக மோசமான முறையில் விசாரணை நடந்துள்ளது என கூறியுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வரும் 2026 தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கைதான் தமிழக பட்ஜெட் : ஹெச் ராஜா கிண்டல்!

திருச்சி, பாஜக மாவட்ட அலுவலகத்தில் டாஸ்மாக் துறையில் நடந்த ஊழல் குறித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு…

33 minutes ago

லஞ்சம் வாங்கிய விஏஓ… துரத்திய போலீஸ்.. கைதுக்கு பயந்து குளத்தில் குதித்து தப்பியோட்டம்!

கோவை மாவட்டம், பேரூர் அருகே ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணசாமி. (வயது 62) வாரிசு சான்றிதழ் கேட்டு மத்துவராயபுரம்…

49 minutes ago

2 வயது மகள் உயிரிழப்பு..உடைந்து போன பிரபல கிரிக்கெட் வீரர்.!

மகளை இழந்த துக்கத்தில் ஹஸ்ரத்துல்லா பிரபல ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹஸ்ரத்துல்லா ஷசாய் குடும்பத்தில் ஏற்பட்ட துயர நிகழ்வு ரசிகர்கள்…

1 hour ago

இந்தியில் டப் செய்வாங்களா..ஆனால் இந்தி வேண்டாமா..பவன் கல்யாண் விளாசல்.!

பாலிவுட் பணத்தை மட்டுமே விரும்புகிறார்களா? தமிழக அரசியல்வாதிகள்,இந்தி மொழியை ஏற்க மறுக்கின்றனர்,ஆனால் பாலிவுட்டில் இருந்து வரும் பணத்தை மட்டும் விரும்புகிறார்கள்…

2 hours ago

செல்போன் கடையில் பணம் கேட்டு திமுகவினர் மிரட்டல்.. அமைச்சர் பெயரை சொல்லி அடாவடி!

விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் செயல்பட்டு செயல்படும் செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யப்படும் கடையில் திமுகவை சார்ந்த மூன்று…

2 hours ago

This website uses cookies.