செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருள்மிகுஸ்ரீ கந்தசாமி திருக்கோவில் கடந்த ஆறு மாதங்களுக்கு பின்பு இன்று உண்டியல் திறந்து காணிக்கை என்னபட்டது
இதில் பக்தர்கள் தாலி, கண்மலர்,வேல்,பண முடிப்பு சில்லறை நாணயங்கள் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் என உண்டியலில் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப நிரப்பி வைத்திருந்தனர்
இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் ராஜலட்சுமி EO குமரவேல் ஆய்வாளர் பாஸ்கரன் முன்னிலையில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டது.
இதில் 52 லட்ச ரூபாயும் 289 கிராம் தங்கமும் 6920 கிராம் வெள்ளியும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தனர்
இதையும் படியுங்க: நெல்லை கோர்ட் வாசலில் இளைஞர் கோர கொலை.. 3 தனிப்படைகள் அமைப்பு!
இதில் வியக்கத்தக்க வகையில் தவறவிட்ட ஒரு செல்போனும் கிடைக்கப்பெற்றுள்ளது. அது யாருடைய செல்போன் என்று ஆய்வு மேற்கொண்டதில் சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த தினேஷ், சென்னை சிஎம்டிஏ நிர்வாகத்தில் பணி செய்பவரின் செல்போன் என தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து அவருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவரும் உண்டியல் என்னும் இடத்திற்கு வந்து செல்போனை பெற முயன்ற போது கோவில் நிர்வாகத்தினர் உண்டியலில் போட்ட அனைத்து பொருட்களும் முருகனுக்கே உரியது உங்களுக்கு செல்போன் கொடுக்க முடியாது. வேண்டுமென்றால் உங்களுடைய தரவுகள் ஏதேனும் செல்போனில் உண்டு என்றால் அவற்றை மட்டும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.
குடும்பத்திருடன் செல்போனை பெற்றுக் கொள்ளலாம் என வந்தவருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. ஏற்கனவே இவர் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மனு அளித்து எனது செல்போனை மீட்டுக் கொடுக்கும்படி கேட்டுள்ளனர் நிர்வாகத்தினர் நிர்வாக ரீதியான முறைப்படி நீங்கள் அங்கு மனு அளித்து மீண்டும் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்ததன் பெயரில் அவர் திரும்பி சென்றார்
கொடை வள்ளல் ராகவா லாரன்ஸ்.! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மிகுந்த வரவேற்பை…
சம்பளம் குறைப்பு காரணம் இதுதான் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான வருடாந்திர ஊதிய ஒப்பந்தங்களை பிசிசிஐ வெளியிட உள்ளது.2025-26ஆம் ஆண்டுக்கான…
தெலுங்கு, கன்னட சினிமாக்களில் கொடி கட்டி பறந்த ராஷ்மிகா, தமிழ், இந்தி மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். பாலிவுட் சென்ற அவர்…
நடிகை ஸ்ருதி நாராயணன் விளக்கம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும்…
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ராம் சரண் இன்று அவருடைய வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இந்த நிலையில் அவருடைய நடிப்பில்…
திருப்பூரில், ஆசையாக அழைத்த பெண் கும்பலுடன் சேர்ந்து ஒருவரின் நகை மற்றும் பணத்தை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
This website uses cookies.