Categories: தமிழகம்

மற்றொரு கட்சியுடன் நட்பு வைப்பது ஓட்டுக்காக மட்டும்தானா? நீருக்காக இல்லையா? திமுகவுக்கு ஆளுநர் தமிழிசை கேள்வி!

மற்றொரு கட்சியுடன் நட்பு வைப்பது ஓட்டுக்காக மட்டும்தானா? நீருக்காக இல்லையா? திமுகவுக்கு ஆளுநர் தமிழிசை கேள்வி!

மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை ஊராட்சி கோழிகுத்தி கிராமத்தில் பிரசித்தி பெற்ற வானமுட்டி பெருமாள் கோயில் எனப்படும் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் உள்ளது.

இக்கோயிலில் ஒரே அத்தி மரத்தில் 14 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் வானமுட்டி பெருமாள் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.

முன்னதாக ஆலய நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சுவாமி தரிசனம் மேற்கொண்ட ஆளுநருக்கு ஆலய நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியபோது, ஆன்மீகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் , இன்று ராகு கேது பெயர்ச்சி என்பதால் நவகிரகங்களுக்கும் விஞ்ஞானத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது என கூறினார்.

மேலும் ஆன்மீக ரீதியான எதிர் கருத்துக்கள் தமிழகத்தில் அதிகமாக பரப்பப்படுவதாகவும் , தமிழகத்தில் ஒரு மத வழிபாட்டை தொடர்ந்து உதாசீனப்படுத்துவது அதிகமாக நடந்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

கருத்து சுதந்திரம் பற்றி பேசக் கூடியவர்கள் , மற்றவர்கள் யாராவது தமிழக அரசை எதிர்த்து கருத்து தெரிவித்தால் அவர்களை கைது செய்கிறார்கள். அரசு கருத்து சுதந்திரத்தைப் பற்றி சிந்திப்பதில்லை என விமர்சித்தார்.

சனாதன தர்மம் என்பது வாழ்க்கை முறை என்றும் அதை டெங்குவை போன்று ஒழிப்போம் என தெரிவிக்கிறார்கள் ஆனால் டெங்குவை கூட அவர்களால் ஒழிக்க முடியவில்லை எனவும் , டெங்குவால் பல்வேறு அதிகாரிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார். டெங்குவை ஒழிக்க முடியாதவர்கள் சனாதனத்தை அழிப்பேன் எனக்கு கூறுவது முறை கிடையாது என தெரிவித்தார்.

பல குடமுழுக்குகளை செய்திருப்பதாக தமிழக முதலமைச்சர் கூறி இருப்பதாகவும் , ஒரு குடமுழுக்கில் கூட பங்கேற்க வாய்ப்பு ஏற்படுத்தாமல் இருப்பதாகவும் விமர்சித்தார்.

தான் தஞ்சையில் படித்து தற்போது ஆளுநர் பதவியில் வளர்ந்து இருப்பதாகவும் ஆனால் தற்போது வரை டெல்டா பகுதி விவசாயிகள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தார்.

காவிரி பிரச்சனையில் அரசியலை நுழைய விடாமல் இரு மாநில விவசாயிகளின் பிரச்சனை என பார்க்க வேண்டும் எனவும் , ஆளும் கட்சி தான் இதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனவும் எதிர்க்கட்சியை எதிர்த்து போராட்டம் நடத்துவது எப்படி நியாயமாக இருக்கும் என்றும் கூறினார்.

காவிரி பிரச்சனையை தமிழக அரசு சட்டரீதியாகவும் நட்பு ரீதியாகவும் கையாள வேண்டும் எனவும் , தமிழக முதலமைச்சர் கொள்கை கூட்டணி என கூறுகிறார் .ஆனால் அனைவருக்கும் தண்ணீர் சமம் என்ற கொள்கைக்கு ஏற்றார்போல் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
சென்ற காலங்களில் இருந்த முதலமைச்சர் போல் தமிழக முதல்வர் தண்ணீர் பெற்று தருவதற்கு தீவிரமான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என கருத்து தெரிவித்தார்.

எதிர்க்கட்சியாக இருக்கும் போது தான் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள் . தற்போதும் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். மற்றொரு கட்சியுடன் நட்பு ஏற்படுத்துவது வெறும் ஓட்டுக்காக மட்டும் தானா தண்ணீருக்காக இல்லையா என கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாட்டிற்காக தண்ணீர் கொடுப்பதும் கொள்கைதான் எனவும் , ஆனால் தண்ணீரைக் கேட்டு பெற்று தரவில்லை என்றால் எதற்காக கூட்டணி சேர்கிறார்கள் என கேள்வியை எழுப்பினார். கூட்டணி நட்பை தமிழகத்திற்கு பயன்பெறக்கூடியதாக வைத்துக் கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்தார்.

பிரதமர் மோடி தமிழகத்தை சிறுமைப்படுத்தி எந்த கருத்துக்களும் தெரிவிக்கவில்லை , கோயில்களைப் பற்றி பேசுவதற்கு எல்லா இடத்திலும் பிரதமருக்கு உரிமை இருப்பதாகவும் தெரிவித்தார்.

தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்து தெரிவிப்பதில்லை என்றும் எதனால் கோவில்களை வைத்துள்ளார் எனவும் கேள்வி எழுப்பினார். மற்றொரு மதத்தை சார்ந்தவர்களின் உணர்வுகளை மதித்து வாழ்த்து சொல்வதற்கு கூட முதலமைச்சரால் முடியவில்லை என்றால் யார் மதத்தை வைத்து பிரித்தாள்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஜனநாயகன் படம் தள்ளிப்போனதுக்கு இதுதான் காரணம்? ஓபனாக உடைத்து பேசிய பத்திரிக்கையாளர்…

விஜய்யின் கடைசி திரைப்படம் அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை ஒரு அரசியல்வாதியாக எதிர்கொள்ளவுள்ளார் விஜய். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் தனது…

31 minutes ago

உடம்பில் ஆடையே இல்லாமல் படப்பிடிப்பிற்கு வந்த நம்பியார்! எம்ஜிஆர்தான் காரணமா?

எம்ஜிஆர்-நம்பியார் நட்பு திரைப்படங்களில் எம்ஜிஆர்க்கு நம்பியார் எப்போதும் வில்லன்தான். அதுவும் இந்த ஹீரோ வில்லன் கூட்டணி அமைந்துவிட்டால் அந்த படம்…

1 hour ago

ரியல் எஸ்டேட் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவதாக மிரட்டல் : வழக்கறிஞரின் பரபரப்பு காட்சி!

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தகிரி. இவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் முரளிதரன் என்பவர்…

1 hour ago

முதலமைச்சர் ஸ்டாலின், கனிமொழி எம்பி குறித்து ஆபாசமாக பேசி வீடியோ பதிவு : அதிர்ச்சி சம்பவம்!

கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. சமையல் வேலை செய்யும் இவர், இந்து முன்னணியில் உறுப்பினராக இருந்து வருகிறார்.…

3 hours ago

இளம்பெண்ணை விடிய விடிய பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் : கோவிலுக்கு சென்ற போது விபரீதம்!

கோவிலுக்கு சென்ற இளம்பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் மதுபோதையில் விடிய விடிய பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை…

3 hours ago

AI தொழில்நுட்பத்தால் உயிர் பிழைக்கும் தனுஷ்? ஹிட் படத்தின் கிளைமேக்ஸை மாற்றும் படக்குழு!

இனி AI யுகம்… Artificial Intelligence எனப்படும் AI தொழில்நுட்பம் இனி வரும் காலங்களில் மக்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை…

3 hours ago

This website uses cookies.