புதுமைப்பெண் திட்டத்தில் 2ம் கட்ட தொடக்க விழா தமிழகத்தில் இன்று நடைபெற்றது. இதனை சென்னையில் தொடங்கி வைத்த தமிழக முதல்வர் ஸ்டாலின், புதுமைப்பெண் திட்டத்தில் தகுதியான அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் காசோலைகளை வழங்கினார்.
நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் கல்லூரியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி மேடையில் கணினி திரையில் முதல்வர் நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
இந்த விழாவில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டு 1590 மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் படி ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை கொடுத்து துவக்கி வைத்தார்.
பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசியவர், அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கும் இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்க வேண்டுமென பலர் கோரிக்கை வைத்துள்ளனர் அது முதல்வரிடம் கூறப்படும் என தெரிவித்தார்.
டெல்டா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு அரசின் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
கடந்த பத்து ஆண்டுகளில் அப்போதைய அதிமுக அரசு அதிக அளவில் கடன் வாங்கி உள்ளதாகவும், அதற்கு தற்போது வட்டி கட்டி வருவதாகவும் தெரிவித்தார்.
நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு மழை பெய்யாத காரணத்தினால் வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல் களக்காட்டில் வாழை பயிரிட்ட விவசாயிகளுக்கு போதிய நிவாரண உதவியை தமிழக அரசு உடனே அறிவிக்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.