மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, தமிழக கவர்னர் தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளார். குறிப்பாக டெல்லி சென்று வந்ததில் இருந்து மாநில அரசிற்கு எதிரான போக்கை கடைபிடிக்காமல் அமைதியாக இருக்கிறார்.
மேலும் ஒரு பொறுப்பு கவர்னர் நியமிக்க இருப்பதாக தகவல் வருகின்றது. அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் இருப்பது, பா.ஜ.க.விற்கு சாதகமாக அமையும். போட்டிபோட்டுகொண்டு காவடி தூக்குவது அ.தி.மு.க.விற்கும், தொண்டர்களுக்கும் நல்லதல்ல.
பா.ஜ.க. வளர்வது, அ.தி.மு.க.விற்கு நல்லதல்ல. தமிழகத்திற்கும் நல்லதல்ல. ஈரோடு இடைத்தேர்தலில், காங்கிரஸ் போட்டியிடுகிறது.
தி.மு.க. சார்பிலான மதசார்பற்ற கூட்டணிக்கு விடுதலை சிறுத்தைகள் பாடுபடும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.
நிறைவேற்றப்படாமல் இருக்கும் பல கோரிக்கைகளையும் நிறைவேற்றுவார்கள் என நம்பிக்கை இருக்கிறது. சாதிவாரிய கணக்கெடுப்புக்கான குரல், வட மாநிலங்களில் வலுவாக உள்ளது.
பீகாரில் இதுகுறித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் என்றார்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.