கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் பாபு இவரது மனைவி பூபதி. இவருக்கு அவரது உறவினர் மூலம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த மோகன்குமார், அவரது தாயார் மணி, மனைவி ஷோபனா ஆகியோர் சில வருடங்களுக்கு முன்பு அறிமுகம் ஆகியுள்ளனர்.
இதனை அடுத்து மோகன் குமார் பூபதியிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி அதற்கு 5.44 லட்சம் செலவாகும் என கூறியுள்ளார். இதனை அடுத்து பூபதியும் கடந்த 2021ம் ஆண்டு மோகன் குமாரிடம் அந்த பணத்தை கொடுத்துள்ளார்.
45 நாட்களில் வேலை வாங்கி தருவதாக கூறிய நிலையில் குறிப்பிட்ட நாட்களுக்கு மேலாகியும் வேலை வாங்கி தராததாக தெரிகிறது. பின்பு தான் மோகன்குமார் அவரது குடும்பத்தினருடன் இணைந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டது பூபதிக்கு தெரிய வந்தது.
இதனை அடுத்து பூபதி கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரில் புகார் அளித்ததன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் மோகன்குமார், அவரது தாயார் மற்றும் மனைவி சேர்ந்து ஒன்பது பேரிடம் சுமார் 36 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்தது.
இதனை அடுத்து விசாரணையின் அடிப்படையில் மோகன் குமார் மற்றும் அவரது தாயார் மணி ஆகிய இதுவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தேர்வு துவங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே அனைத்து தேர்வர்களும் தேர்வு எழுதும் மையங்களுக்கு வருகை புரிந்திருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.