சென்னை பெருநகர காவல் துறையில் வடக்கு மண்டலத்தில் பராமரிப்பு மற்றும் தரநிலைகளின் அடிப்படையில் 15 காவல் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், ராயபுரம், காசிமேடு, யானைக்கவுனி, ஏழுகிணறு, வடக்கு கடற்கரை, முத்தியால்பேட்டை, புளியந்தோப்பு, பேசின்பாலம், எம்.கே.பி.நகர், கொடுங்கையூர், செம்பியம் ஆகிய 15 காவல் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சான்றிதழ் ஆனது பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை, காவல் நிலையம் வரும் மக்களை அணுகும் முறை, காவல் பதிவேடு பராமரிப்பு, வரவேற்பு மற்றும் காத்திருப்பு அறை பராமரிப்பு மற்றும் பதிவேடுகள் பராமரிப்பு உள்ளிட்ட நிலைகளின் அடிப்படையில் 15 காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த 15 காவல் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சிசென்னை பாரிமுனையில் உள்ள வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகர காவல் ஆணையர், வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.