மத்திய இணை அமைச்சர் எல் முருகன் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும் போது, பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அந்த மாநில அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.
மம்தா பானர்ஜி குற்றவாளிகள் மேல் நடவடிக்கை எடுக்காததால் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர் ஜே பி நட்டா உத்தரவின் பேரில் இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
மருத்துவர்களின் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அந்தந்த மாநில அரசின் கையில் உள்ளது.
நமக்காக மருத்துவ சேவை செய்யும் மருத்துவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். எல்லை தாண்டி செல்லும் தமிழகப் மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் மத்திய அரசு தலையிட்டு கைதான மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. மீனவர்கள் மீது மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.
மீனவர்களின் மேம்பாட்டுக்காக மீன்பிடி துறைமுகங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துகொடுப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.
அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை கொடுத்ததே பாஜக தான். இந்தியா ஜனநாயக நாட்டில் மக்கள் சேவைக்காக யார் வேண்டு மென்றாலும் கட்சியை ஆரம்பிக்கலாம்.
நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கி கொடியை அறிமுகம் செய்ததை நாங்கள் வரவேற்கிறோம் என்று தெரிவித்தார்.
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
கரூர், பஞ்சமாதேவி பகுதியில் பொன்னுச்சாமி என்பவர் புதியதாக கட்டி வரும் வீட்டிற்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்காக சிவாஜி, ராஜேந்திரன், மாயவன் ஆகிய…
This website uses cookies.