Categories: தமிழகம்

தமிழகத்தில் அந்த BJP வேட்பாளர் வெற்றி பெற்றால் சிறந்தது : சுப்பிரமணியன் சுவாமி வைத்த TWIST!

தமிழகத்தில் அந்த BJP வேட்பாளர் வெற்றி பெற்றால் சிறந்தது : சுப்பிரமணியன் சுவாமி வைத்த TWIST!

தமிழக பாஜகவை பொறுத்தவரை இந்த தேர்தல் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதாவது கடந்த 2019ல் பாஜகவுக்கு ஒரு எம்பி கூட தமிழகத்தில் கிடைக்கவில்லை.

இதனால் இந்த லோக்சபா தேர்தல் மூலம் தமிழகத்தில் இருந்து சில எம்பிக்களை டெல்லிக்கு அனுப்பும் நோக்கத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வியூகம் வகுத்து இருந்தார். அதோடு பாஜக மேலிடமும் தமிழகத்தில் நிச்சயம் கால்பதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை (கோவை), மத்திய இணையமைச்சர் எல் முருகன் (நீலகிரி), முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் (தென்சென்னை), நடிகை ராதிகா (விருதுநகர்), பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் (திருநெல்வேலி), முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் (கன்னியாகுமரி) உள்ளிட்டவர்களை களமிறக்கி உள்ளது.

இத்தகைய சூழலில் தான் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 20 முதல் 25 சதவீத ஓட்டுகளை பெறும் வகையில் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

அதோடு பாஜக கூட்டணி 20க்கும் அதிக இடங்களில் வெல்லும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் இந்த நம்பிக்கை பலிக்கிறதா? இல்லையா? என்பதை நாம் அறிய ஓட்டு எண்ணிக்கை தினமான ஜுன் 4 வரை காத்திருக்க வேண்டும்.

இந்நிலையில் தான் பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி தமிழ்நாட்டில் இருந்து பாஜகவின் ஒரு வேட்பாளர் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றால் கட்டாயம் மகிழ்ச்சியடைவேன் என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‛‛தமிழ்நாட்டில் பாஜகவின் திருநெல்வேலி வேட்பாளர் (நயினார் நாகேந்திரன்) வெற்றி பெற்றால் நான் அதிகம் மகிழ்ச்சியடைவேன். அதேவேளையில் நான் பிற பாஜக வேட்பாளர்கள் எனக்கு பரீட்சயமானவர்கள் இல்லை. இதனால் அவர்களை பற்றி கருத்து சொல்லாமல் இருப்பதே சிறந்தது” என கூறியுள்ளார்.

நயினார் நாகேந்திரன் பற்றி சுப்பிரமணியன் சுவாமி பேசுவது இது முதல் முறையல்ல. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்திருந்தபோதும் கூட சுப்பிரமணியன் சுவாமி, ‛‛திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் வெற்றி பெறுவார்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

7 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

8 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

9 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

10 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

12 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

13 hours ago

This website uses cookies.