தமிழகம்

போலீசே ஆதரவு.. என்ன கொலை செஞ்சிடுவாங்க.. ஜாகீர் உசேன் பேச்சு!

கொலை மிரட்டல் தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி திருநெல்வேலி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததாக கொலையுண்ட ஜாகிர் உசேன் வீடியோவில் கூறியுள்ளார்.

திருநெல்வேலி: நெல்லை டவுன் தடிவீரன் கோயில் தெருவைச் சேர்ந்த ஜாகிர் உசேன் பிஜிலி (57), காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேலும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அவரின் தனிப்பிரிவு அதிகாரியாக வும்இருந்தார்.

இந்த நிலையில், ரம்ஜானை ஒட்டி நோன்பு இருந்து வரும் நிலையில், இன்று அதிகாலையில் தர்காவுக்கு தொழுகைக்குச் சென்று திரும்பும்போது வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் கார்த்திக் மற்றும் அக்பர்ஷா ஆகிய இருவர் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இந்த நிலையில், ஜாகிர் உசேன் உயிரோடு இருந்தபோது தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது, “கிருஷ்ணமூர்த்தி என்பவர் தெளபிக் என தனது பெயரை மாற்றி, இஸ்லாமில் சேர்ந்துள்ளார். இரண்டாவதாக இஸ்லாமியப் பெண்ணை திருமணம் செய்துள்ள நிலையில், தனது மனைவி மூலமாக வஃக்பு வாரியத்தின் சொத்தான 36 சென்ட் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்று வருகிறார்.

அவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற நிலையில், என் மீதும் எனது மனைவி மீதும் வன்கொடுமை வழக்கு கொடுத்துள்ளார். இது விசாரணையில் உள்ளது. பிரச்னைக்குரிய நிலத்தின் அருகில் உள்ள 2.5 சென்ட் வஃக்பு வாரியத்திற்குச் சொந்தமான நிலத்தில் வருமானம் ஈட்டும் நடவடிக்கையாக ஒரு தற்காலிக கொட்டகை அமைக்க முயன்றேன்.

அப்போது பகிரங்கமாக கிருஷ்ணமூர்த்தி என்கிற தெளபிக் கொலை மிரட்டல் விடுத்தார். எனது உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. எப்படியும் என்னை கொலை செய்து விடுவார்கள். கொலை மிரட்டல் தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி திருநெல்வேலி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தேன்.

இதையும் படிங்க: 25வது நாளை கடந்த ‘டிராகன்’.. தியேட்டரில் வசூல் ஆட்டம்..!

தற்போது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நெல்லை டவுன் காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், உதவி ஆணையாளர் செந்தில்குமார் ஆகியோர்தான் எதிர் தரப்பிற்கு ஆதரவாக செயல்படுகின்றனர். கொலை மிரட்டல் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் ஆதாரமாக கொடுக்கப்பட்டும், காவல் ஆய்வாளர் நடவடிக்கை எடுக்கவில்லை” என பேசியுள்ளார்.

மேலும், இந்தக் கொலை மிரட்டல் சம்பவத்தின் பின்னணியிலும் வஃக்பு இடம் ஆக்கிரமிக்கும் பின்னணியிலும் திமுகவைச் சார்ந்த மின்சார வாரியத்தில் பணிபுரியும் உதவிப் பொறியாளர் ஒருவரின் பெயரையும் ஜாகிர் உசேன் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Hariharasudhan R

Recent Posts

ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?

அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…

8 hours ago

இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…

5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

9 hours ago

திமுகவும், கைக்கூலிகளும் வக்பு சொத்தை அபகரித்துள்ளனர் : பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!

பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…

9 hours ago

காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றம் சென்று மீண்டும் அதே இடத்தில் நடத்துவோம் : பாஜக பிரமுகர் எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…

10 hours ago

வடிவேலு கூட அப்படி ஆகிடுச்சு? மத்தவங்க இருந்ததுனால தப்பிச்சேன்- கவர்ச்சி நடிகை ஓபன் டாக்

வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…

11 hours ago

This website uses cookies.