ஒரு திரைப்படம் உருவாகி வெளியாவது என்பது சுலபமான காரியமல்ல. தாய் குழந்தையை பெற்றெடுப்பதற்கு சமம் என தயாரிப்பாளர், இயக்குநர்கள் முதல் படக்குழுவே இந்த கூற்றை ஒப்புக்கொள்ளும்.
அப்படி உருவான படங்கள் தரமாக இருந்தாலும் மக்கள் மனதில் பதிய தவறிவிடுகின்றன. அதே போல ஒரு படம் திரையரங்குகளில் ரிலீசாகாமல் போனால் அதில் ஏற்படும் நஷ்டம் மரணத்தை விட கொடுமையானது.
இதையெல்லாம் தாண்டி கொரோனா என்னும் பேரிடரால் ஓடிடி தளத்தில் வெளியான படம் தான் ஜெய்பீம். உண்மைக்கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டம் படம் ஜெய்பீம். படத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய போதும், வெற்றிக்கனியை சுவைத்தது.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வழக்கறிஞர் சந்துரு போராடிய கதையை கையில் எடுத்த இயக்குநர் ஞானவேல், அருமையான கதாபாத்திரங்களை தேர்வு செய்து கோட்டையில் கொடி நாட்டியுள்ளார்.
படம் வெளியானது முதல் தமிழ் ரசிகர்களால் புடை சூழப்பட்ட ஜெய்பீம் திரைப்படம் ஆஸ்கர் தகுதி பட்டியிலில் தேர்வானது உலக தமிழர்களால் வெகுவாக பேசப்பட்டு வருகிறது. அதுவும் உலக சினிமாவின் உயரிய விருதான ஆஸ்கர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் ஜெய்பீம் படக்காட்சி இடம்பெற்றது, உலக சினிமா ரசிகர்களையே தமிழ் சினிமா பக்கம் திரும்பி பார்க்க வைத்தது என்பதே நிதர்சனமான உண்மை.
இந்த நிலையில் நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய்பீம் படம் மூன்று விருதுகளை குவித்துள்ளது. சிறந்த நடிகருக்காக சூர்யா, சிறந்த நடிகைக்காக லிஜோமோல் ஜோஸ், சிறந்த படம் என 3 பிரிவுகளில் விருதை வென்று அசத்தியுள்ளது.
தனை அடுத்து படக்குழுவினருக்கு திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு வேளை ஆஸ்கர் விருதில் ஜெய்பீம் படத்திற்கு விருது கிடைத்தால் தமிழ் சினிமா புதிய அத்தியாயத்தை பதிக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
This website uses cookies.